என் மலர்
தேனி
- மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் சக்தி பைப் லைன் அமை க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்துக்கு ட்பட்ட கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், மயிலாடு ம்பாறை, வருசநாடு, முருக்கோடை, தும்ம க்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட 18 ஊராட்சி களிலும் பைப் லைன் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த ஊராட்சிகளில் மீண்டும் சாலை அமைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாண வர்கள் விபத்தில் சிக்குவ தோடு இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சாலைகள் எப்படி இருந்ததோ அதே போல் பைப் லைன் அமைக்கப்பட்ட பிறகு சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சில ஊராட்சி களில் சாலை அமைத்ததாக கூறி ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே கடமலை, மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
- இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சின்னமனூர்:
சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்துபோதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள உறவினர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா, மது விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர்அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஹைவே விஸ் பேரூராட்சி.
இந்த பேரூராட்சிக்கு ட்பட்டு மேகமலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவை தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு 6500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சிக்னல் கிடைக்காமல் அவசர தேவையான ஆம்புலன்ஸ்சை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மலை கிரா மங்களில் வெளியு லகத்தின் தொடர்பு இல்லா மல் துண்டிக்க ப்பட்டது போல் பொதுமக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் பிரச்சினை சீரமைக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் தியேட்டரில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு விதித்து ள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி திரையரங்கிற்கான உரிமை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், அதன் உரிமை மற்றும் சான்றிதழ்கள் முறையாக புதுப்பிக்கப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் திரையரங்கி ற்கான மின்சார பராமரிப்பு முறைகள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், தீயணைப்பு கருவிகளின் நிலை, அவசர வழிகள், முதல் உதவி சாதனங்கள் போன்ற அவசர கால பயன்பாட்டு உபகரண ங்களின் நிலை மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு பாதுகாப்பு துறை யின் சார்பில் வழங்கப்பட்டு ள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவு தயார் செய்யப்படுகிறதா, திரையர ங்கிற்கு வரும் பொது மக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு மேற்கொ ண்டார்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் சாதனை விளக்க விளம்பர குறும்படங்கள் முறையாக திரையிடப்படு கிறதா என்றும் அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி திரையரங்கம் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
- செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.
நேற்று இரவு யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.
பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
செல்போன் தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளி ஒண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி அனுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 68). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் வலுக்கட்டாயமாக உறவுக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினாள்.
சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.
- விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
தேனி:
தேனி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,
சமத்துவப் பாதையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் என 2 முக்கிய நோக்கங்களை கொண்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து தந்துள்ளது. இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவற்காக அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முகாம் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பணிகளையும், முகாம் நடைபெறும் நாளன்று தேவையான குடிநீர், இருக்கை வசதிகள், இணைய வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டத்தில் 517 ரேசன் கடைகள் உள்ளன. இக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்களால் வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப தலைவிகள் முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் பொழுது, குடும்ப அட்டை அசல், ஆதார் அட்டைஅசல், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகிய 4 வகையான அடையாள அட்டைகளை அசலாக எடுத்து செல்ல வேண்டும்.
விண்ணப்பத்தோடு எந்தவிதமான ஆவணங்களின் நகலினையும் இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு மையத்திலோ அல்லது விண்ணப்பங்களுக்கோ எந்த விதமான கட்டணங்களும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரிபார்த்திட விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு சென்றவுடன் உதவி மையங்களில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பப் பதிவு பணியாளரிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு குடும்ப அட்டையில் உள்ள பெண்களில் ஒருவர் மட்டுமே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பப் பதிவு மையத்திற்கு நேரில் எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள எண் கொண்ட கைப்பேசியினை எடுத்து செல்வது விண்ணப்பத்தினை பதிவு செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
- தனது கணவருக்கு அருகில் வசிக்கும் உறவினர்கள் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர்.
தேனி:
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி ஷீலா (வயது 35). செல்லப்பாண்டிக்கு அருகில் வசிக்கும் உறவினர்களான மயிலம்மாள், செல்லம்மாள், சூர்யா, ஈஸ்வரபாண்டியன் ஆகியோர் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதற்கு ஷீலா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டனர்.
படுகாயமடைந்த ஷீலா தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர்சுந்தரம் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறிவுத்திருக்கோவில் நிர்வாகத் தலைவர்சிவராமன் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.
சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி வனிதா, ஆடிட்டர் மித்ராதேவி , அறிவுத்திருக்கோவில் செயலாளர் தயாளன், பொருளாளர் சந்திரன், திட்ட அலுவலர்சுகந்தி ,மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரேஸ்வரி, பசுமை பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனை முருகன், சீனிவாசா நகர் நலச்சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ராஜ்மோகன், காஞ்சனா, அனீஷ், சில்லை அஜித்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இதில் தி கிரீன் லைப் பவுண்டேசன் உறுப்பினர்கள் சேகர், செந்தில்ராஜ், அர்ச்சுனன்,சந்திரசேகர், ஹரி கிருஷ்ண பாண்டியராஜ், உதயா ரத்தினம் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- கணவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
- போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தரவி மனைவி அனுஷா(25). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனந்தரவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
மேலும் அனுஷாவிடம் கூடுதலாக 20 பவுன் நகையும், ரூ.5 லட்சம் பணம் வாங்கி வரவேண்டும் என கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வீட்டைவிட்டு துரத்தியதால் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனுஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஆனந்தரவி, அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வாகனம், பைக் மற்றும் தனியார் பஸ் மோதி 3 பேர் பலி.
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய்(25). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த விஜய் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சகோதரர் அஜித் அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணிக்கு செல்வதற்காக சின்னமனூர்- உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவணக்குமாரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(70). தேவாரம்- போடி சாலையில் கோணம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாரியப்பன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
- குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கி 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, ஹைேவவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு என 5 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேங்கும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக இரவங்கலாறு அணையில் இருந்து சுமார் 2000 மீ தொலைவில் உள்ள சுருளி நீர்மின்நிலையத்திற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இதன்மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரை தலைமை வனபாதுகாவலர் தலைமையில் இரவங்கலாறு அணைப்பகுதியில் 220 மீ குழாயை சீரமைக்க மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கினர். இதனைதொடர்ந்து 22 மாதங்களுக்கு பிறகு தற்போது ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் பணிகள் முடிந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கயத்தாறு மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.






