என் மலர்tooltip icon

    தேனி

    • ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள தப்புக்குண்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அவரது நண்பர் சின்னராஜூக்கும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார். படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார்.
    • சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(34). இவருக்கும் அழகுமலை என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    அழகுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார். சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் வீட்டைவிட்டு செல்லுமாறு அவரை விரட்டியுள்ளனர். இது குறித்து சீதாலட்சுமி தேனி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தர வின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீ சார்வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் கலந்து கொண்டு பூமிபூஜையுடன், அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் ராதாராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்கொடி, பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    • சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.
    • இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் பகுதியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக மாரியப்பன்(67) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூக்குழி திருவிழா நடை பெற்றது. அப்போது கோவில் பூசாரியான மாரி யப்பன் தீயில் இறங்கினார்.

    பூக்குழி அருகே நின்று கொண்டிருந்த உதயசிங் மற்றும் விழாக்குழுவினர் கூட்ட நெரிசலில் மாரியப்பனை தள்ளினர். இதில் பூக்குழியில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
    • மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் அணையின் நீர்மட்டம் 115 அடியில் இருந்து 120 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.

    இதனால் முல்லைபெரியாறு அணை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன்பிறகு மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.

    நீர்மட்டம்

    இன்றுகாலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து 301 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2619 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடி, வரத்து 36 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2005 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 79.31 அடியாகவும் உள்ளது.

    • விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருநாள் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தேனி அரசு மருத்துவமனை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற ரத்த தானம் முகாமை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து, ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த ரத்ததானம் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடைபெற்ற ரத்ததான முகாமில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் ரத்ததானம் செய்தனர்.

    இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
    • விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 1 தேங்காய் 11 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இருப்பினும் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் விலை குறைவால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தென்னை விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
    • கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து பாண்டியின் மகள் மலர்மணி அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம், மணி, விஜயபாண்டி, பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் பாண்டியை கொலை செய்த மணி, விஜயபாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் பாக்கியம், பிரேமா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.

    • இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.
    • பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டம், தேக்கம்பட்டி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்த கல்வியாண்டில், மாதிரி பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்காக தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.

    பாடங்களை மனப்பாட முறையில் கற்காமல் அறிவியல் பூர்வமாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுலபமாகவும் மாணவர்கள் அறிந்து புரிந்து படிக்கும் வகையில் இங்கு பாடத்திட்டங்கள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை சிறப்பு தேர்வுகளில் பங்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல உயர்கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பெற்றோர்களுடன் வரவழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கி மாணவர்களுக்கு விருப்பமான கல்வி பயில்வதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    தேசிய மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சென்று நம் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக இம்மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த சிறப்பு அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பிற்கு 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், உயிரியல் என பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு, விடுதி உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுத்து கல்வி கற்பிக்கப்படும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க நிர்வாகியின் பைக்கை மர்மநபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் பாரதியார்நகர் தெற்கு 4-வது தெருவை சேர்ந்தவர் வித்யாபதி (வயது30). இவர் தனியார் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் பா.ஜ.க. இளைஞரணி துணைச் செயலாளராகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வித்யாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பைக்கை தீ வைத்து எரித்தி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. அதிர்ஷ்ட வசமாக அப்பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் செல்லவில்லை. மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. எனவே இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஷேர் ஆட்டோவில் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்றனர்.
    • விபத்தில் பெண் பலியானார். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரைச் சேர்ந்த வர் நரசிங்கபெருமாள் என்ற ரவி (வயது 40). சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இன்று காலை தனது ஆட்டோவில் வேலைக்கு செல்லும் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு சென்றார். வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவி ழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

    ஆட்டோவில் இருந்த டிரைவர் ரவியின் மனைவி ஷோபனா (39) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சின்ன மனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பரமே ஸ்வரி (வயது 18).

    தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×