போடி அருகே சத்துணவு அமைப்பாளரை தாக்கி பொருட்கள் சூறை!

மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

தேனி:

தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி மீனாட்சி (வயது 45). இவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மீனாட்சியின் மகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கேரளாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக ஈஸ்வரன் கேரளாவில் இருந்து கோம்பைக்கு வந்தார். அப்போது மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.

உயிருக்கு பயந்து அவர் வெளியே ஓடி வரவே வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஈஸ்வரன் சூறையாடி ரூ.5 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இது குறித்து மீனாட்சி கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com