என் மலர்tooltip icon

    தேனி

    • பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுரேஷ் வீரபாண்டி கோவில் கடையில் பூ வாங்கிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஆண்டிபட்டி சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த முரளி (வயது 29), கருப்பணன் (22), பிரேம்குமார் (27) ஆகியோர் காரில் அதிவேகமாக வந்தனர். அப்போது டிரைவர் சுரேஷ் பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சுரேசின் மூக்கில் கத்தியால் குத்தினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சுரேஷ் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இது போன்ற பழக்கம் மறந்து விட்டாலும் கிராமங்களில் இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதிதாக திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை ஆடி முதல் நாளில் வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை வழங்கி கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள். மேலும் அவர்களுக்கு சீர் வரிசையும் வழங்கி ஒரு வாரம் தங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பார்கள்.

    ஆடி விருந்து என்பது தலை ஆடி, நடு ஆடி, கழிவு ஆடி என 3 வகைகளில் விருந்து அளிக்கப்படுகிறது. ஆடி முதல் நாளில் அளிக்கப்படும் விருந்து தலை ஆடி என்றும் 2 வாரங்கள் கழித்து அளிக்கப்படும் விருந்து நடு ஆடி என்றும், கடைசி நாளில் அளிக்கப்படும் விருந்து கழிவு ஆடி என அழைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளுக்கு தலை ஆடி மற்றும் நடு ஆடியிலேயே விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கழித்து கட்டிய மருமகனுக்கு கழிவு ஆடி என்ற பழமொழி உள்ளது. இதனால் கடைசி ஆடியில் மருமகனை அழைத்தால் அது கவுரவ குறைச்சலாக இன்று வரை கிராமங்களில் கருதப்படுகிறது. இதனால் அவரவர் வசதிக்கேற்றபடி புதுமணத்தம்பதிகளுக்கு விருந்து அளித்து வருவது வழக்கமாக உள்ளது.

    அதன்படி ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக பண்டிகை நாட்களில் கொண்டாடப்படுவதைப் போல ஆடியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் ஏராளமான ஆடுகள், கோழிகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

    அதிகாலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதனை வாங்கிச் சென்றனர். இதே போல காய்கறிகள் விற்பனையும், ஜவுளி உள்ளிட்ட விற்பனையும் அதிகமாக நடந்ததால் பெரும்பாலான வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் முத்து (வயது45). தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (46). இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அேத பகுதியை சேர்ந்த கோகுலபாண்டியன், குருநாதபாண்டியன் ஆகியோர் செல்போனை திருடிச் சென்றனர். அவர்களை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்பட ைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து குழந்தையை வளர்த்து வந்தனர்.
    • மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.

    தேனி:

    தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகி ன்றனர்.

    மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்து றையினர் தடைவிதித்தனர்.

    இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

    • பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.

    யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

    பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
    • சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்று க்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

    இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கரிசல் பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சமுதாய கூடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தை சொந்த கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றித்தரும்படி மாணவ ர்களின் பெற்றோர்களும் கரிசல்பட்டி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் மற்றும் தனியார் கல்லூரி மாணவி மாயமாகி உள்ளனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ராஜலட்சுமி குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கலையரசி (18). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது.
    • வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்தபோதும் முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து அணைப்பகுதியில் மழை பெய்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உத்தமபாளையம் உட்கோட்டப் பகுதிகளில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஓடைப்பட்டி முதல் தென்பழனி வரை ரூ.4 கோடி லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தி தார்சாலை அமைக்கும் பணிகள், மூர்த்திநாயக்கன்பட்டி-ஆனைமலையான்பட்டி சாலையில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உத்தமபாளையம்-போடேந்திரபுரம் சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகளையும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகர பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக சாலை மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார்.

    முன்னதாக அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி-போடிநாயக்கனூர் 4 வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்திப்பு பகுதியினை மேம்படுத்துவதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்குப்பின் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அவர்களுக்கு வழங்கிய ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், விழா நாட்களிலும், பிற முக்கிய நாட்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    • நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் , மதுரை மண்டல தலைமை பொறியாளர் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே வைகை அணை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்றும் நிலையம் மற்றும் குருவியம்மாள்புரம் அருகில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வைகை அணை நீரினை ஆதாரமாக கொண்டு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி- தேனி ஆகிய ஊராட்சி ஒன்றிய ங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், அதன் நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கள பொறியாளர்கள் மற்றும் துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணி களை விரைந்து முடிக்க அலு வலர்களுக்கு அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் வேல்முருகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் நடராஜன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிப்ளமோ படித்து முடித்த தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.
    • இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன்(27). இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரதி(21) என்பவருடன் திருமணம் நடந்தது. டிப்ளமோ படித்து முடித்த மணிகண்டன் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார்.

    இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைதொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மீண்டும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×