என் மலர்
தேனி
- பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வாட்டர் டேங்க் பின்புறம் வசித்து வருபவர் கண்ணன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருள்கார்த்திகா (17) என்ற மகளும், பார்த்த சாரதி (16) என்ற மகனும் உள்ளனர்.
பார்த்தசாரதி ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரின் ஆட்டோவை பார்த்த சாரதி சுக்காங்கால்பட்டி அருகே ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர்கள் சுரேஷ், மணிகண்டன், அகமது உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
- பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஞானம் என்பவர் கூறியதாவது:-
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஒரு நாள் அவர்களது வேலையை விட்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஹைவேவிஸ் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
மணலாறு- மகாராஜா மெட்டுவரை சாலை வசதிகள் இதுவரை செய்து தரவில்லை. எனவே உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான சமுதாயக்கூடம் சேதம் அடைந்து உள்ளது. இதை சரி செய்து தர வேண்டும்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகத்தில் சுமார் 14 கடைகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த வணிக வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் தங்கும் விடுதியில் முறையான அலுவலர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்களே அலுவலர் பணியை பார்த்து வருகிறார்கள்.
ரேசன் கடைகளில் விலை இல்லா அரிசி மற்ற பொருள்கள் சரியான முறையில் விநியோகிக்க படுவதில்லை. இதை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஹைவேவிஸ் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டி பயன் பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இக்கட்டிடத்தை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவருக்கும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உசிலம்பட்டியில் இருந்து அல்லிநகரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
- அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கன் (வயது 70). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு அல்லிநகரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.
- இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்கு சுமார் 5 சதுர கி.மீ. பரப்பில் மீனாட்சி அம்மன் கண்மாய் அமைந்துள்ளது.
மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் இக்குளத்தில் உற்பத்தியாகும் மீன்களை உண்பதற்காக கொக்கு,நாரை, வாத்து, நீர்க்காகம், மீன் கொத்தி பறவை, கரண்டிமூக்கன் பெலிக்கண் போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் ஆயிரக்கணக்கில் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் இந்த கண்மாய்க்கு கால்வாய்கள் மூலம் வந்தடைகிறது.
அம்மாபட்டி ஊராட்சிக்கு சொந்தமான இந்த கண்மாயில் தற்போது மீன்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை, கண்ணாடி கெண்டை, உழுவை, குரவை, கெழுத்தி, நாட்டு ரக மீன்கள் உற்பத்தி இனப்பெருக்கம் செய்யப்பட்டு தினமும் சுமார் 500 கிலோ முதல் 750 கிலோ வரை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது போதிய மழையின்மை காரணமாக கண்மாய் க்கு வரும் நீர்வரத்து நின்று விட்டதால் கண்மாயில் நீர் வற்றி குறைந்து காணப்படுகிறது.
தற்போது சில நாட்களாக இந்த கண்மாயில் தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளது. இதனால் கண்மாயை சுற்றிலும் மீன்கள் செத்து மடிந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தினால் கண் மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் மேல சொக்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.
தினமும் இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடான கண்மாயாக மாறி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
- யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.
அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.
தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளில் போதுமான கழிப்பட வசதி இல்லாததால் கம்பம்மெட்டு சாலையில் உள்ள நகராட்சி பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் சேதமடைந்ததையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுகாதார வளாகம் மூடப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது.
பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன தூய்மை வளாகம் கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்து தூய்மை வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சுகாதார வளாகத்தை திறக்க கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையில் சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். தற்காலிகமாக சுகாதாரமின்றி கிடக்கும் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சரி செய்து தருவதாக நகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நகராட்சியில் ஆணையாளர் பதவி காலி இடமாக உள்ளதால் புதிய ஆணையாளர் வந்தவுடன் வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி நவீன சுகாதார வளாகம் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமலும், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதியடைந்தனர்.
- நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி வ.உ.சி. நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி முத்துமணி (வயது 42). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
- பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்து நின்று விட்டது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு வரவில்லை.
115 அடியில் இருந்து பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடிக்கு உயர்ந்த நிலையில் அதன் பிறகு மழை குறைந்ததால் நீர் வரத்து நின்றது. இருந்தபோதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது. நேற்று 197 கன அடி வந்த நிலையில் இன்று காலை 97 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2574 மி.கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 49.89 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1977 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 70.52 அடியாகவும் உள்ளது.
- சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
- படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 33). இவர் தனது உறவினர் மாறன் (57) என்பவருடன் வேலை நிமித்தமாக சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
- சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.
சின்னமனூர்:
சின்னமனூரில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. சின்னமனூர் - உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திட்டத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஒருபுறம் வாகனங்கள் அதிகம் போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலை, மறுபுறம் விவசாய நிலங்கள் என்ற இரண்டுக்கும் நடுவே ஆபத்தான நிலையில் எந்த பிடிமானமும் இல்லாமல் சாய்ந்த நிலையில் மின் மாற்றிகளும் உயர் மின்னழுத்த கம்பிகளும் நிற்கின்றன .இதனால் வாகன ஓட்டிகளும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.
குழாய் பதிப்புக்காக பணிகள் நடைபெற்ற போது பாசனத்திற்காக இருந்த நீர் வழி பாதைகள் சிதைக்கப்பட்டு தற்போது நீர் பாசன வசதி பெற முடியாமல் பல ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன .மேலும் சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையும் பழுதடைந்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
குழாய் பதிப்பிற்காக தார்சாலையை ஒட்டி சில இடங்களில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை எந்த பிடிமானம் இல்லாமல் சரிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. சின்னமனூர் - கம்பம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குழாய் பதிப்பு பணிகளை முழுமையாக முடித்து சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






