search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் நோய் கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    கோப்பு படம்.

    போடியில் நோய் கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை

    • நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி வ.உ.சி. நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி முத்துமணி (வயது 42). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×