என் மலர்
தேனி
- வாலிபர் போலீஸ் எனக்கூறி மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
- கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. மூதாட்டியான இவர் தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக போலீஸ் குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுஅங்கு வந்த வாலிபர் தான் போலீஸ் என்றும் உங்கள் பையில் உள்ளதை சோதனையிட வேண்டும் என கூறினார். மேலும் மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார்அளிக்கப்ப ட்டது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
அதனை வைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைவரிசை காட்டிய வாலிபர் சிக்கினார். போலீசார் விசாரணையில் அவர் கோட்டூர் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு என தெரிய வந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- மின்தடை ஏற்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்து க்குட்பட்ட கடமலை, மயிலை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் வாழை, தென்னை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலங்களுக்கு வருசநாடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்த டிரா ன்ஸ்பார்மர் பழமையானது என்பதாலும் அதிகப்படி யான வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் திறன் இல்லாமல் இருந்தது.
எனவே புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வருச நாடு பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது. இதனால் மின் வினியோகம் தடை பட்டது.
எனவே வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர். கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் வயலில் ஈரப்பதம் தங்கி இருக்கும்.
தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்ப தால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய உடன் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக பயிர்கள் காய்ந்து காணப்படு கிறது. மேலும் சில நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ள ப்படும். டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வந்தால்தான் மின் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்பணி நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். மின் வாரிய அதிகாரிகள் வந்து பணியை பார்வையிட்டு சோதனை அடிப்படையில் இயக்கிய பிறகுதான் மின் வினியோகம் கொடுக்க ப்படும். இதனால் பயிர்கள் முற்றிலும் சேதடையும் என தெரிவித்துள்ளனர்.
எனவே பணியை விரைந்து முடித்து பயி ர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
- தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது.
கூடலூர்:
கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல்போக நெல்சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.
- கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
- குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது.
தேனி:
தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.
ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.
தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.
இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.
ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.
தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.
இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இப்போட்டிகளில் 23 பள்ளிகளை ேசர்ந்த 244 மாணவிகளும், சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் 3 குழந்தைகள் இல்லங்களில் இருந்து 34 பெண் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளினையே 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடபட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கொண்டாட திட்டமிடப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
2ம் நாள் நிகழ்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப்போட்டிகளும்,
நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், சதுரங்கம், இறகுபந்து (ஒற்றையர்) மற்றும் கேரம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 23 பள்ளிகளை ேசர்ந்த 244 மாணவிகளும், சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் 3 குழந்தைகள் இல்லங்களில் இருந்து 34 பெண் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு சுதந்திர தின விழாவில் 'சாம்பியன்' பட்டத்துடன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த பெண் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
- கொட்டக்குடி உண்டு உறைவிட பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மலைவாழ் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
- சுவர்களில் நீரேற்றம் காணப்பட்டு எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் கட்டிடத்தின் ஜன்னல் கதவுகள் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது கொட்டக்குடி மலை கிராமம். தமிழகத்திலேயே மிக அதிக வருவாய் ஈட்டி தரக்கூடிய மலைவாழ் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக இது உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை கிராமத்தைச் சுற்றிலும் குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், முதுவாக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் கொட்டக்குடியில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கண்ணாங்கரை கிராமம் மற்றும் கொட்டக்குடி கிராமத்தில் 2 உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன. கொட்டக்குடி உண்டு உறைவிட பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மலைவாழ் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் மற்றும் உணவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நபர் ஆகிய 3 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிட பள்ளி கட்டிடம் தற்போது சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்உள்ளது.
மழைக்காலம் இல்லாத தற்போதைய நிலையிலும் மரத்தின் வேர்கள் சுவர்களில் ஊடுருவி இருப்பதால் மேற்கூைரகள் மற்றும் சுற்றுச் சுவர்களில் நீரேற்றம் காணப்பட்டு எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் கட்டிடத்தின் ஜன்னல் கதவுகள் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலும் கழிப்பறையும் போதிய சுகாதாரம் இன்றி உள்ளது. இதனால் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் இந்தக் கட்டிடத்தின் நிலை கண்டு அச்சத்தில் தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்காமல் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கி விட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இங்கு தங்கி பயிலும் குழந்தைகளும் கற்று தரும் ஆசிரியர்களும் அருகிலுள்ள ஊராட்சி மன்ற கிராம சேவை மையக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்போது வகுப்புகள் நடத்துவதற்காக மட்டுமே கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக பயன்படுத்தி வரும் நிலையில் சிதிலமடைந்த கட்டிடத்தில் இரவில் தங்கும் குழந்தைகள் அச்சத்துடனேயே உள்ளனர்.
இங்கு பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் வழங்கப்பட்டாலும் இப்பகுதியில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் பகலில் இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்ற நேரங்களில் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ள போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சிரக்காடு, சோலையூர், மேலப்பரவு போன்ற பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களும், குரங்கணி மற்றும் அதன் சுற்று மலை கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிகுந்த அச்சமும் தயக்கமும் காட்டி வருகின்றனர்.
எனவே உண்டு உறைவிடப்பள்ளியை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
- சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.
அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
- சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன.
குறிப்பாக புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய காலகட்டங்களில் மக்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் பாறை ஓவியங்களும், நெடுங்கற்கள், கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி போன்றவை உள்ளன.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் ஒன்றாக கற்பதுகையுடனான குத்துக்கல் அமைப்பு தமிழ் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவு இப்பகுதியில் வெம்பூர் கிராமத்திற்கு அருகே கல்லாதிபுரத்தில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பலநூறு நெடுங்கல் தூண்கள் இருந்தன. அவை அனைத்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டு, விளைநிலமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த பெருங்கற்கால, புதிய கற்கால நினைவு சின்னங்களை நாள்தோறும் சிதைத்தும் அழித்தும் வருகின்றனர். வருசநாட்டின் பெருமையை மட்டுமின்றி, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றக்கூடிய தொல் நினைவுச் சின்னங்களை, தொல்லியல் துறை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியை ஆவணம் செய்து அகழாய்வு செய்திட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் என்பவர் கூறுகையில், வருசநாடு அருகே உள்ள வெம்பூர் பகுதியில் உள்ள நடுகல் தமிழகத்திலேயே மிக உயரமான கல்லாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த கல் உள்ளது. இது ஆவண படுத்தப்பட்டதற்கான சான்றும் உள்ளது.
ஆனால் பராமரிப்பின்றி இருப்பதால் இதனை பாதுகாக்க வேண்டும். மேலும் தங்கம்மாள்புரத்தில் பொட்டி அம்மன் கோவில் தற்போது சிவன் கோவில் என அழைக்கப்படுகிறது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது. இந்த கோவிலில் இருந்த பழமையான கற்களை பொதுமக்கள் தாங்கள் வீடு கட்ட எடுத்து சென்று விட்டனர்.
மீதமுள்ள சிலைகள் மற்றும் பழமையான கற்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாண்டியர் காலத்தில் மாறவர்மனால் கடமலைக்குண்டுவில் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அதுவும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.
இங்கு பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இப்பகுதியில் தேன் மற்றும் மூலிகை எடுக்க செல்லும் மக்களால் இந்த பாறை ஓவியங்கள் எரித்து, சேதப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது. கீழடியைப் போல இங்கேயும் தொல்லியல்துறை ஆய்வு நடத்தி அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் மீதமுள்ள சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.
- திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டுக்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சின்னமனூர்:
தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.
தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.
முப்பெரும் தெய்வங்க ளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானு க்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்க ளுடன் காட்சி அளிக்கிறார்.
இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளில் நடை பெறுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. முதல் சனி வார திருவிழாவன்று காலை 11 மணிக்கு கலிப்பணம் கலிக்கப்படும். பின்பு கோவில் வளாகத்தைச் சுற்றிலும் சுத்தநீர் தெளித்து வழிபாடு நடைபெறும்.
பூலாந்தபுரம் ராஜ கம்பளத்தார் திருவிழா வுக்கான சகுனம் பார்ப்பர். அப்போது காகம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பறந்து செல்வது சுவாமி உத்தரவாக எடுத்துக் கொள்ளப் படும்.
இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். அன்றும், ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 4-ந்தேதி பகல் 12.30 மணிக்கு சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு சனிதோறும் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சள் காப்பு சாத்துப்படி, சுவாமி புறப்பாடு, ஆக.7-ம் தேதி மாலை 6 மணிக்கு லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆக.19-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடையும்.
விழாவை முன்னிட்டு கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று நெரிசலின்றி வெளி யேறும் வகையில் தனிப்பா தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டு க்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
- ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைஅணையில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டனர்.
இதனால் ஏற்கனவே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்து தற்போது அவர்கள் மூலமாகவே மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிசலில் செல்ல மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வழக்கமாக 65 மீன்பிடி பரிசலில் சென்று மீன்பிடிப்பார்கள். ஆனால் தற்போது 30 பரிசல்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.
காற்றின்வேகம் குறைந்த பின்பு அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார்.
- அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தியதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவிந்த்(45). இவருக்கு மஞ்சளாறு அணை பகுதியில் மாந்தோப்பு உள்ளது. இதன் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது.
அவர் சென்றுவர தனது நிலத்தில் பாதை அமைக்க ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார். மேலும் அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தி உள்ளார். இதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றபோது பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது.
- படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
கம்பம் ஆலமர தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(50). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும் உள்ளனர். சரவணக்குமாருக்கு திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்த நாகராஜ் கிடைக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்தநிலையில் க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றார். பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






