search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்பிடிப்பில் சாரல் மழை: முல்லைபெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    கோப்பு படம்

    நீர்பிடிப்பில் சாரல் மழை: முல்லைபெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    • முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
    • தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல்போக நெல்சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர்.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×