என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ground breaking ceremony"

    • தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் கலந்து கொண்டு பூமிபூஜையுடன், அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் ராதாராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் மலர்கொடி, பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், நேசம் தொண்டு நிறுவனர் முருகன், தி.மு.க நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70.57 கோடியில் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
    • அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இந்த கட்டிடம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில், அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    ×