search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ROAD DEVELOPMENT WORKS"

    • ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உத்தமபாளையம் உட்கோட்டப் பகுதிகளில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஓடைப்பட்டி முதல் தென்பழனி வரை ரூ.4 கோடி லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தி தார்சாலை அமைக்கும் பணிகள், மூர்த்திநாயக்கன்பட்டி-ஆனைமலையான்பட்டி சாலையில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உத்தமபாளையம்-போடேந்திரபுரம் சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகளையும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகர பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக சாலை மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார்.

    முன்னதாக அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி-போடிநாயக்கனூர் 4 வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்திப்பு பகுதியினை மேம்படுத்துவதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்குப்பின் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அவர்களுக்கு வழங்கிய ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், விழா நாட்களிலும், பிற முக்கிய நாட்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

    • மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.
    • காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    வெள்ளக்கோவில் :

    வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாநில செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

    வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் வள்ளியிரச்சல் ஊராட்சி வரட்டுக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் .கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முருகேசன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் இளங்கோ, இளம்பூரணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் ஓலப்பாளையம் முதல் மொட்டக்காடு வரையிலும், மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.

    இப்பணிகளைத் தரமான முறையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • ரூ.129 கோடியில் 4 வழி சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ளது.

    அரியலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படிமுதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டு 2021-22 ல் சுமார் 255.02 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையை ரூ.129 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி இன்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இச்சாலை மேம்பாடு செய்யும் வழித்தடத்தில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், ராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ளது.

    இச்சாலையில் 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் 38 சிறுபாலங்கள் புதியதாக கட்டப்படவுள்ளன. சாலையின் இரு மருங்கிலும் 3400 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாக அமையும். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.129 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியானது 21 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்பு ஏற்றுச்செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தெரிவித்தார்.

    ×