search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj Birthday Celebration"

    • விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருநாள் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் தேனி நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 6,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தேனி அரசு மருத்துவமனை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற ரத்த தானம் முகாமை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்து, ரத்ததானம் வழங்குவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த ரத்ததானம் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடைபெற்ற ரத்ததான முகாமில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் ரத்ததானம் செய்தனர்.

    இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
    • மலர் தூவி மரியாதை செலுத்தினர்

    ஜோலார்பேட்டை :

    ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் தலைமை தாங்கினார். தி.மு.க நகர செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் பி. ஆர். முகிலன், கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் ஐ. ஆஜம் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு சுவால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகரச் செயலாளர் வி. ரவிச்சந்திரன், தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஹரிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் காந்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் எம். யமுனா, நெமிலி ஒன்றிய செயலாளர் ரவி, அரக்கோணம் ஒன்றிய தலைவர் தேவேந்திரன், நகரத் துணைத் தலைவர் சுபாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் உத்தமன், நகர செயலாளர் கே.கஜேந்திரன், நகர பொருளாளர் முனுசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கஜேந்திரன், ஒன்றிய சிறப்பு அமைப்பாளர் புருஷோத்தமன் பலர் உடன் இருந்தனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பேச்சாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.

    • விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    • முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் காமராஜரின் 120- வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20 மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து காமராஜரின் பிள்ளைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை பல்வேறு நிகழ்வுகளை நாடகமாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் காமராஜரின் புகழ்பாடும் பாடல், கல்விக்கு காமராஜர் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய பேச்சு, காமராஜர் பற்றிய குறும்படம் முதலியவற்றை மாணவர்களுக்குத் திரையிட்டு காட்டி காமராஜரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சுஷ்மா வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் பிரமோதினி மாணவர்களிடையே காமராஜரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஆசிரியை ஜூலியட் சாந்தகுமாரி நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×