என் மலர்
சிவகங்கை
இளையான்குடி அருகே மொபட் மீது பஸ் மோதியதில் கோவில் பூசாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே வாணி கிராமத்தில் கருமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரசாமி தேவர் (வயது 77) இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கோவில் பூஜையை முடித்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். வாணி விலக்கில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் அரசு பஸ் டிரைவர் நாகசாமியை(52) கைது செய்தனர்.
காரைக்குடி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கீழ மேல் வீதியைச் சேர்ந்தவர் வீரசேகரன். இவர் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தெய்வானை (வயது 71). இவர்களது மகன்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவிலும் மற்றொருவர் பெங்களூருவிலும் உள்ளனர். பள்ளத்தூர் வீட்டில் வீரசேகரனும் தெய்வானையும் மட்டுமே உள்ளனர்.
மார்கழி மாதம் கோவில்களில் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சி நடைபெறுகிறது. இதனால் தெய்வானை அதிகாலை 4.30 மணி அளவில் எழுந்து வீட்டின் வாசலை தெளித்து கோலமிடுவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை அவர் எழுந்து வீட்டு வாசல் முன்பு கோலமிட்டு கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தெய்வானை வீட்டு அருகே நிறுத்தினர். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு ஆசாமி கீழே இறங்கினான். வெளியே கோலம் போட்டு கொண்டு இருந்த தெய்வானை பயந்து வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
உடனே அந்த ஆசாமி, தெய்வானை கழுத்தில் கிடந்த நகையை பறித்தான். உடனே தெய்வானை திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் ஆசாமி நகையை பறித்து கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். திருடனுடன் போராடியதில் தெய்வானையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. பறிபோன நகை வைரம் பதிக்கப்பட்ட 8 பவுன் ஆகும். அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் சிங்கம்புணரியும் ஒன்று. இது தனித்தாலுகா அந்தஸ்து பெற்று சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. சிங்கம்புணரியை சுற்றி 100 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைக்கு சிஙகம்புணரிக்கு தான் வந்து செல்கிறார்கள்.
சுற்றுப்புற கிராம மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கம்புணரியில் கடந்த 1970-ல் அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டது. அதன்பின்னர் தாலுகா அந்தஸ்து பெற்றவுடன் மருத்துவமனையும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 60 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகள் உள்ளன.
தினமும் இந்த ஆஸ்பத்திரிக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு 8 டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மற்ற 6 டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு பணிமாற்றம் சென்று விட்டனர். இதனால் தற்போது 2 டாக்டர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். புறநோயாளிகளை கவனிப்பதற்கே டாக்டர் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதால் உள்நோயாளிக்கு உடனுக்கு உடன் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. வெளிநோயாளிகள் ஆஸ்பத்திரியிலேயே பல மணி நேரம் காத்து கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் கூறும் போது, கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு புறநோயாளிகள் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டன. அதோடு மழைக்காலம் என்பதால் சாதாரண சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுவதால் அவர்கள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்ணா நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் கூறும் போது, இந்த அரசு பொது மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் பிரசவங்கள் மருத்துவமனை செவிலியர்களே பார்க்கின்ற அவல நிலை உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பெண் மருத்துவர் ஒருவர் கூட இங்கு பணியில் இல்லை. இருந்தவர்களை வேறு ஊர்களுக்கு தற்காலிக பணிக்காக அனுப்பி உள்ளனர். இதனால் கர்ப்பிணிகள் ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற தயக்கம் காட்டுகின்றனர். அதோடு பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். எனவே தாலுகா மருத்துவமனையாக விளங்கும் இங்கு கூடுதல் டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் சிங்கம்புணரியும் ஒன்று. இது தனித்தாலுகா அந்தஸ்து பெற்று சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. சிங்கம்புணரியை சுற்றி 100 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைக்கு சிஙகம்புணரிக்கு தான் வந்து செல்கிறார்கள்.
சுற்றுப்புற கிராம மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கம்புணரியில் கடந்த 1970-ல் அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டது. அதன்பின்னர் தாலுகா அந்தஸ்து பெற்றவுடன் மருத்துவமனையும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 60 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகள் உள்ளன.
தினமும் இந்த ஆஸ்பத்திரிக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு 8 டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மற்ற 6 டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு பணிமாற்றம் சென்று விட்டனர். இதனால் தற்போது 2 டாக்டர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். புறநோயாளிகளை கவனிப்பதற்கே டாக்டர் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதால் உள்நோயாளிக்கு உடனுக்கு உடன் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. வெளிநோயாளிகள் ஆஸ்பத்திரியிலேயே பல மணி நேரம் காத்து கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் கூறும் போது, கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு புறநோயாளிகள் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டன. அதோடு மழைக்காலம் என்பதால் சாதாரண சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுவதால் அவர்கள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்ணா நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் கூறும் போது, இந்த அரசு பொது மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் பிரசவங்கள் மருத்துவமனை செவிலியர்களே பார்க்கின்ற அவல நிலை உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பெண் மருத்துவர் ஒருவர் கூட இங்கு பணியில் இல்லை. இருந்தவர்களை வேறு ஊர்களுக்கு தற்காலிக பணிக்காக அனுப்பி உள்ளனர். இதனால் கர்ப்பிணிகள் ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற தயக்கம் காட்டுகின்றனர். அதோடு பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். எனவே தாலுகா மருத்துவமனையாக விளங்கும் இங்கு கூடுதல் டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.
மானாமதுரை தாலுகாவில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிவு ஆகாததால் ரேஷன் பொருட்களை வினியோகிக்க முடியவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மானாமதுரை:
மானாமதுரை தாலுகாவில் 60 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் அறிமுகத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன்கார்டில் கைரேகை வைத்தால் தான் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரேஷன்கார்டுதாரர்களின் கைரேகை ரேஷன்கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் சரிவர பதிவாகவில்லை. இதனால் ஒருவருக்கு பொருட்கள் வழங்குவதற்கோ ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் ஆனது. இதையடுத்து ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பழைய நடைமுறைப்படி ஸ்மார்ட் கார்டு, அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்்டு வந்தன.
இந்த நிலையில் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேற்று மீண்டும் ரேஷன்கார்டுதாரர்கள் கைரேகை வைத்தால் தான் பொருட்கள் வழங்க முடியும் என அறிவித்தனர். இதையடுத்து ரேஷன்கார்டுதாரர்கள் அங்குள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை வைத்தும் சர்வர் கோளாறு காரணமாக அது பதிவாகவில்லை. இதனால் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடை ஊழியர்களுக்கும், ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பல மணி நேரம் ரேஷன்கார்டுதாரர்கள் கடை முன் காத்து கிடந்தனர். பலமுறை கைரேகை வைத்தும் பதிவாகாததால் பொருட்கள் கிடைக்காமல் திரும்பி சென்றனர். பலர் ரேஷன் கடை முன்பே சர்வர் சரியாகி விடும். கைரேகை பதிவாகி விடும் என நம்பிக்கையில் நீண்ட நேரம் காத்து கிடந்தனர். இந்த பிரச்சினை மாவட்டம் முழுவதும் நீடித்தது. கீழ்பசலை கிராமத்திலும் சர்வர் கோளாறால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்து கிடந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ரேஷன்கடை எந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் பலர் அவதிப்பட்டு உள்ளோம். எனவே ரேஷன் கடைகளில் பழைய நடைமுறையை பின்பற்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதற்காக இங்கு பலமணி நேரம் காத்து கிடப்பதால் மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்ைல என்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.
இதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மொத்தம் 62 பேருக்கு ரூ.26,44,920 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கொத்தங்குளம் குருப்பையா, ராமசாமி, மாரிமுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இணை இயக்குனர்(மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன், இந்து சமய அறநிலையக்குழு மாவட்டத்தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொன்.மணிபாஸ்கரன் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதைதொடர்ந்து பொன்.மணி பாஸ்கரன் பதிவேடுகளில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை ஏற்று கொண்டார்.
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.
இதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மொத்தம் 62 பேருக்கு ரூ.26,44,920 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கொத்தங்குளம் குருப்பையா, ராமசாமி, மாரிமுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இணை இயக்குனர்(மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன், இந்து சமய அறநிலையக்குழு மாவட்டத்தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொன்.மணிபாஸ்கரன் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதைதொடர்ந்து பொன்.மணி பாஸ்கரன் பதிவேடுகளில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை ஏற்று கொண்டார்.
மானாமதுரை-மதுரை இடையே ரெயில்பாதை மின்மயமாக்கும் பணிகளுக்காக ரெயில் நிலையத்திற்குள் மின்கம்பங்கள் வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து மதுரை வரையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணி மானாமதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ராமேசுவரம் வரையிலும், மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரையிலும், மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலும் மின்மயமாக்கும் பணியை ரெயில்வே துறை செய்து வருகிறது.
இதில் மானாமதுரை வரை 48 கி.மீ. தூரமுள்ள பாதையை மின்மயமாக்கும் பணியினை கடந்த பிப்ரவரி மாதம் ரெயில்வே நிர்வாகம் தொடங்கிய நிலையில் மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில்பாதையின் ஓரமாக மின்கம்பங்கள் நடும் பணி நடந்து வந்தது.
இதற்காக இரும்பு மின்கம்பங்கள் தனி ரெயிலில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் நிறுவும் பணி நடந்து வருகிறது. தற்போது மானாமதுரை ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் கிரேன் உதவியுடன் நடந்து வருகின்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து மதுரை வரையிலான ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணி மானாமதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ராமேசுவரம் வரையிலும், மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரையிலும், மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலும் மின்மயமாக்கும் பணியை ரெயில்வே துறை செய்து வருகிறது.
இதில் மானாமதுரை வரை 48 கி.மீ. தூரமுள்ள பாதையை மின்மயமாக்கும் பணியினை கடந்த பிப்ரவரி மாதம் ரெயில்வே நிர்வாகம் தொடங்கிய நிலையில் மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில்பாதையின் ஓரமாக மின்கம்பங்கள் நடும் பணி நடந்து வந்தது.
இதற்காக இரும்பு மின்கம்பங்கள் தனி ரெயிலில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் நிறுவும் பணி நடந்து வருகிறது. தற்போது மானாமதுரை ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் கிரேன் உதவியுடன் நடந்து வருகின்றது.
சாக்கோட்டை, கல்லல் ஒன்றிய பகுதியில உள்ள அரசு மருத்துவமனைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்றார். அங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளுக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அங்கு ரத்தஅழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்து கண்டறியும் பரிசோதனை குறித்தும், புறநோயாளிகளுக்கு சரியான காலக்கட்டத்தில் பரிசோதிக்கப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
3 மாதத்திற்கு ஒருமுறை தொடர் நோய் பாதிப்புள்ள நபர்களை சரியாக பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்து கொள்வதுடன், பிரசவ காலக்கட்டத்தில் கர்ப்பிணிகளை தீவிர கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்,.
அதோடு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள செவிலியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை குறித்த விவரங்கள் குறித்து பதிவேற்றம் செய்து, சுகாதாரம் குறித்து கண்காணிக்கலாம். இந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை பணியாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்ற முன் வர வேண்டும்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கும் நிதி உதவியை சரியான காலக்கட்டங்களில் பெற்று வழங்க வேண்டும். பொதுவாக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களை குழுவாக நியமித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்த இலவச ஆலோசனைகளை வழங்கி பயன்பெற செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அருகே உள்ள பீர்க்கலைக்காடு,ஒ.சிறுவயல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கண்டனூர், பள்ளத்தூர் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்கள் யசோதாமணி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) யோகவதி, வட்டார மருத்துவர்கள் ஆனந்த், சதீஷ், சிவசங்கரி, பூச்சியியல் மருத்துவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் முருகேசன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்றார். அங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளுக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அங்கு ரத்தஅழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்து கண்டறியும் பரிசோதனை குறித்தும், புறநோயாளிகளுக்கு சரியான காலக்கட்டத்தில் பரிசோதிக்கப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
3 மாதத்திற்கு ஒருமுறை தொடர் நோய் பாதிப்புள்ள நபர்களை சரியாக பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்து கொள்வதுடன், பிரசவ காலக்கட்டத்தில் கர்ப்பிணிகளை தீவிர கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்,.
அதோடு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள செவிலியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை குறித்த விவரங்கள் குறித்து பதிவேற்றம் செய்து, சுகாதாரம் குறித்து கண்காணிக்கலாம். இந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை பணியாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்ற முன் வர வேண்டும்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கும் நிதி உதவியை சரியான காலக்கட்டங்களில் பெற்று வழங்க வேண்டும். பொதுவாக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களை குழுவாக நியமித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்த இலவச ஆலோசனைகளை வழங்கி பயன்பெற செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அருகே உள்ள பீர்க்கலைக்காடு,ஒ.சிறுவயல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கண்டனூர், பள்ளத்தூர் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்கள் யசோதாமணி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) யோகவதி, வட்டார மருத்துவர்கள் ஆனந்த், சதீஷ், சிவசங்கரி, பூச்சியியல் மருத்துவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் முருகேசன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
மேலும் இந்த போராட்டம் நடத்துவதற்காக பந்தல் அமைப்பதற்கும் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் எதிரே உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் வந்து போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, கோபால், எம்.எஸ்.கண்ணன், விசுவநாதன், சந்திரன், முத்துப்பாண்டி, முத்துராமலிங்க பூபதி, உலகநாதன், திருநாவுக்கரசு, வீரையா, தண்டியப்பன் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
மேலும் இந்த போராட்டம் நடத்துவதற்காக பந்தல் அமைப்பதற்கும் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் எதிரே உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் வந்து போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, கோபால், எம்.எஸ்.கண்ணன், விசுவநாதன், சந்திரன், முத்துப்பாண்டி, முத்துராமலிங்க பூபதி, உலகநாதன், திருநாவுக்கரசு, வீரையா, தண்டியப்பன் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கம்புணரி:
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். தை மாதம் நெருங்கி வருவதையொட்டி இப்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். காளைகளை அடக்கும் காளையர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்க வித, விதமான மணிகளை அதன் கழுத்தில் கட்டுவார்கள். தற்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிக்கும் பணி சிங்கம்புணரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பாலு என்பவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் கழுத்தில் இருந்து ஜல், ஜல் என்ற ஓசையுடன் மணி ஒலிக்கும். இதற்காகவே சிங்கம்புணரி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மணிகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விலகியதையடுத்து கடந்தாண்டு இங்கு தயாரிக்கப்பட்ட மணிகள் அதிகளவில் விற்பனையானது. பொதுவாக இங்கு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் வழிபாட்டிற்காகவும், போட்டியின் போது அந்த காளைகள் பாய்ந்து செல்லும் போது கழுத்தில் கட்டப்பட்ட இந்த மணிகளின் இடையே ஏற்படும் ஒலியால் அந்த காளைகள் இன்னும் அதிவேகமாக செல்லும் என்பதால் காளை வளர்ப்பவர்கள் இந்த மணிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இங்கு கும்பகோண ஆக்க மணி, மணப்பாறை சாதா மணி, அரியக்குடி மணி உள்ளிட்ட பல்வேறு வகையான மணிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த மணிகள் பெரும்பாலும் காரைக்குடி, அரியக்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்டு பெரிய காளைகளுக்கு 13 மணிகளும், நடுத்தர காளைகளுக்கு 11 மணிகளும், காளை கன்றுகளுக்கு 9 மற்றும் 6 மணிகள் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த மணிகளை பெல்ட்டில் வைத்து தைக்கப்பட்ட நிலையில் அதை பார்வையாளர்கள் கவரும் வகையில் பல்வேறு வண்ண கலர் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் இந்த காளைகளின் மணி அதிக ஆண்டு நீடித்து உழைக்கிறது. இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, அய்யன்பாளையம், மணப்பாறை ஆகிய பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் இங்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மேலும் காளைகளுக்கு கால் சலங்கை, மூக்கணாங் கயிறு, நடு வெட்டு கயிறு, அறுந்து போன மணிகளை மீண்டும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் செய்கிறோம். கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக வேலையின்றி தவித்து வந்தோம். தற்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நெருங்குவதால் காளை உரிமையாளர்களுக்கு பிடித்தமாதிரி மணிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். தை மாதம் நெருங்கி வருவதையொட்டி இப்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். காளைகளை அடக்கும் காளையர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்க வித, விதமான மணிகளை அதன் கழுத்தில் கட்டுவார்கள். தற்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிக்கும் பணி சிங்கம்புணரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பாலு என்பவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் கழுத்தில் இருந்து ஜல், ஜல் என்ற ஓசையுடன் மணி ஒலிக்கும். இதற்காகவே சிங்கம்புணரி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மணிகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விலகியதையடுத்து கடந்தாண்டு இங்கு தயாரிக்கப்பட்ட மணிகள் அதிகளவில் விற்பனையானது. பொதுவாக இங்கு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் வழிபாட்டிற்காகவும், போட்டியின் போது அந்த காளைகள் பாய்ந்து செல்லும் போது கழுத்தில் கட்டப்பட்ட இந்த மணிகளின் இடையே ஏற்படும் ஒலியால் அந்த காளைகள் இன்னும் அதிவேகமாக செல்லும் என்பதால் காளை வளர்ப்பவர்கள் இந்த மணிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இங்கு கும்பகோண ஆக்க மணி, மணப்பாறை சாதா மணி, அரியக்குடி மணி உள்ளிட்ட பல்வேறு வகையான மணிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த மணிகள் பெரும்பாலும் காரைக்குடி, அரியக்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்டு பெரிய காளைகளுக்கு 13 மணிகளும், நடுத்தர காளைகளுக்கு 11 மணிகளும், காளை கன்றுகளுக்கு 9 மற்றும் 6 மணிகள் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த மணிகளை பெல்ட்டில் வைத்து தைக்கப்பட்ட நிலையில் அதை பார்வையாளர்கள் கவரும் வகையில் பல்வேறு வண்ண கலர் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் இந்த காளைகளின் மணி அதிக ஆண்டு நீடித்து உழைக்கிறது. இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, அய்யன்பாளையம், மணப்பாறை ஆகிய பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் இங்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மேலும் காளைகளுக்கு கால் சலங்கை, மூக்கணாங் கயிறு, நடு வெட்டு கயிறு, அறுந்து போன மணிகளை மீண்டும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் செய்கிறோம். கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக வேலையின்றி தவித்து வந்தோம். தற்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நெருங்குவதால் காளை உரிமையாளர்களுக்கு பிடித்தமாதிரி மணிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த டி.வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் (வயது 30), பூச்சிருளப்பன் (25). இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பூச்சிருளப்பனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை காணவில்லை. அந்த மோட்டார் சைக்கிள் குமார் வீட்டிற்கு அருகே நின்றுள்ளது. இது குறித்து பூச்சிருளப்பன், கருப்புசாமி (31) மற்றும் சிலர் சேர்ந்து குமாரிடம் கேட்டு உள்ளனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பூச்சிருளப்பன் அவருடன் வந்தவர்கள் குமாரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் அவருக்கு தலை, கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பூச்சிருளப்பன், கருப்புசாமி மற்றும் சிலர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக பூச்சிருளப்பன், கருப்புசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த குமார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் இருந்த காய்கறிகள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்துள்ள கூட்டுறவுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட பப்பாளி பழங்களை விற்பதற்காக ராமநாதபுரத்திற்கு ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றார். அந்த வாகனத்தை அவரே ஓட்டி சென்றார்.
அவர் சிவகங்கை-மதுரை பைபாஸ் ரிங்ரோடு பகுதியில் சென்ற போது மதுரையில் இருந்து தொண்டி நோக்கி காய்கறி ஏற்றிகொண்டு வந்த மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இருந்த காய்கறி, பழங்கள் சாலையில் சிதறி ஓடின.
பொன்னையா ஓட்டி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதில் இருந்த 1½ டன் பப்பாளி பழங்கள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் 2 சரக்கு வாகனத்தில் வந்த 2 வாகன டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் பஸ் நிறுத்தம் அருகே அண்ணாதுரை மகன் தில்லை முருகன் (வயது 25), நண்பர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் மாட்டு தீவனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளனர். இரவு கடையிலேயே இருவரும் தங்கி உள்ளனர்.
சம்பவத்தன்று தில்லை முருகன் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று நண்பருடன் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது கடைக்கு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் அழுபிள்ளை தாங்கி ஊரை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ரமேஷ்(என்ற) மருதுபாண்டி(24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






