என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
    • காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

    மானாமதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், ஓவிய ஆசிரியர். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டியுள்ளார்.

    64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தொலை தொடர்பு சாதனமாக அஞ்சல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது படைப்புகளை அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கமும் இருந்து வந்தது.

    தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி விட்டது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பு போல் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

    எனவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.

    தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீக்கடைக்காரர் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் கந்துவட்டி கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை திருவேகம்புத்தூர் அருகே ஆந்தகுடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் ஒத்தக்கடை பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    தொழில் நிமித்தம் காரணமாக கந்து வட்டி கொடுப்பவர்களிடம் திருநாவுக்கரசு கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பணத்தை சரியாக செலுத்தாத காரணத்தால் அவருக்கு கந்துவட்டிக்காரர்களால் தொல்லை அதி கரித்துள்ளது.சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று விட்டார். இதை கண்டுபிடித்து அங்கு சென்ற கந்துவட்டிக்கா ரர்கள் திருநாவு க்கரசுவை மிரட்டியதாக கூறப்ப டுகிறது.

    இந்நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து திருநாவுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றதாகவும், அவர்கள்தான் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருநாவுக்கரசை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற கந்துவட்டி கும்பலை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    • சிவராத்திரி விழாவில் நடந்த குல தெய்வ வழிபாட்டில் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர்.
    • இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் ஆண்டி முனீசுவரர் கோவில் வீட்டில் சிவராத்திரியின் 3-ம் நாளில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். ஆண்டி முனீசுவரர் கோவிலில் பக்தர்கள் தட்ட பயறு, மொச்சை, சுண்டல், பச்சரிசி, தேங்காய், பழம், அவல், மாவிளக்கு உள்ளிட்டவைகள் வேகவைத்து சாமிக்கு படையலிட்டனர். மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர், முனீசுவரர், சன்னாசி உள்ளிட்ட சாமியாடிகளின் சாமியாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கருங்காலி கம்பு, சாட்டை எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பெண்கள் குலவையிட சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறினர்.இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு கேட்டு சென்றனர். பின்பு அவித்த பயறு வகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பிறகு கோவில் வீட்டு வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை- சீதையம்மாள் கல்லூரியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணி நடத்தினர். துணை முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலையில் வட்டாட்சியர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். துணை வட்டாட்சியர் ராஜா முகமது பங்கேற்றார். நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து பேரணியாக மதுரை ரோடு, அண்ணா சிலை, காந்தி சிலை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்-பேராசிரியர்கள் கார்த்திகேயன், நாகராஜன், மாரிக்கண்ணு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இதில்

    300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    • சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி தர்கா சந்தனக்கூடு விழா தொடங்கியது.
    • இந்த விழாவில் மும்மதத்தினர் கலந்து கொள்கின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூர் ஒன்றியம் அருகே உள்ள கரிசல்பட்டியில் ஹஜரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா மதநல்லி ணக்க விழாவாக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 873-வது சந்தனக்கூடு விழா நேற்று தொடங்கியது.

    இதை முன்னிட்டு கரிசல்பட்டி அருகில் உள்ள கே.புதுப்பட்டி, கரியாம் பட்டி, வலசைப்பட்டி இந்துக்களும் உள்ளூர் முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து ஊரின் மையப்பகுதியில் உள்ள மச்சி வீட்டு அம்மா தர்ஹாவிற்கு வந்தனர். அங்கிருந்து கொடி யேற்றத்திற்கான கொடி யினை அலங்கரிக்கப்பட்ட நாட்டிய வெள்ளை குதிரையின் மேல் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    ஊர்வலம் ஹஜ்ரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா வந்தடைந்த பின் கொடி தர்ஹா உள்ளே கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துவா செய்த பின்னர் தர்ஹா முன்பு உள்ள கொடிமரத்தில் 10 அடி நீளமுள்ள பிரமாண்டமான கொடி ஏற்றப்பட்டது.

    கொடியேற்றத்தின்போது வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தினை தொடர்ந்து இன்றிலிந்து 10-வது நாளில் சந்தனம் பூசும் சந்தனக் கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் பங்கேற்பர்.கொடியேற்றத்தை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க நாட்டிய குதிரையின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

    • ஓரியூர் செல்லும் இலவச பஸ்கள் சரிவர இயங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
    • மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்கு வரத்து கழக பணிமனை உட்கோட்டத்தில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் தேவ கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படு கிறது.

    அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த நிலையில் அவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தேவகோட்டையில் இருந்து வெளிமுத்தி, மணக்குடி ஊரணி கோட்டை கீழக்கோட்டை, மங்களக்குடி வழியாக ஓரியூர் வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ்களில் இலவச பயணத்தால் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இலவச பயண அறிவிப்பு நாளிலிருந்து தற்போது வரை இந்த 2 டவுன் பஸ்களும் சரிவர இயங்குவ தில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று காலை இந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக ளுக்கு செல்ல முடியா மல் அவதிப்பட்டனர். இந்த டவுன் பஸ் சரிவர இயக்கப்படாததால் அதற்கு அடுத்து இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த 2 டவுன் பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்று ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

    இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 நாளில் ரூ.6.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • றைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் மாவட்ட நிா்வாகம், கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம் சார்பில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கி நேற்று (20-ந்தேதி) நிறைவடைந்தது.

    முகவை சங்கமம் என்ற தலைப்பில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் முதல்-அமைச்சரின் திட்டங்கள் குறித்து செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இல்லம் தேடி கல்வி திட்ட அரங்குகள் உள்பட 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் எழுதிய சுமாா்2.48 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றன. மூலிகை, ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. தினமும் கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனித் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பொதுமக்கள் என 2.20 லட்சம் போ் பங்கேற்றனா். ரூ.6.35 கோடிக்கு புத்தகங்கள் விற்கப்பட்டன. கொடையாளா்கள் மூலம் 3,500 புத்தகங்கள் வரப் பெற்றன. நிறைவு விழாவில் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். நிறைவு நாளில் சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    • உதவி ஆணையர் ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ( சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 275 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் தகுதி யுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் அறிவுறுத்தி னார்.

    இந்த கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி வட்டத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் சமூக பாது காப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
    • அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடந்த உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கில் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு சிறந்த தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் என்ற விருது கிடைத்தது.

    கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த நிகழ்வுகளை சிறப்பாக செய்தமைக்கான சிறந்த கல்லூரியாகவும் சாகிர் உசேன் கல்லூரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் நாசரை கல்லூரி ஆட்சிகுழு செயலாளர் ஜபருல்லான், ஆட்சிகுழு நிர்வாகிகள், முதல்வர் அப்பாஸ்மந்திரி ,அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குநர் வேதிராஜன், கள ஒருங்கிணைப்பாளர் அருமைரூபன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை செல்லப்பெருமாள் காலமானார்
    • நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர்-பொறியாளர் வெற்றிகுமரனின் தந்தை நா.செல்ல பெருமாள் காலமானார்.

    அவரது இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி யளவில் மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மரணம் அடைந்த செல்லப்பெருமாளின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்ற தொகுதி மண்டலச் செயலாளர் சாயல்ராம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொரு ளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன், திருவாடானை சட்ட மன்ற தொகுதி செய லாளர் வெற்றி என்ற ஜெயச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    • எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் சக்தி கணபதி, பொன்னழகி அம்மாள், வெற்றிவேல் முருகன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பொன்னழகி அம்மன் தோரணவாயில் குதிரை மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி, ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியில் தீபாராதனை நடத்தப்பட்டது. கடம் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி சாமியாடி, பூசாரி கருப்பசாமி, பூசாரி சின்ன காளை, மாயழகு, ஆறுமுகம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×