search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் வழக்கு தொடர எதிர் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
    X

    தேர்தல் வழக்கு தொடர எதிர் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

    • தேர்தல் வழக்கு தொடர எதிர்தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக பிரியதர்சினி அய்யப்பன் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் ேகார்ட்டு, ஐேகார்ட்டு வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் வழக்கை முடித்து வைத்தது.

    இந்தநிலையில் தேவி மாங்குடி பஞ்சாயத்து தலை வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று பிரியதர்சினி அய்யப்பன் தரப்பில் தாக்கல் செய்திருந்த புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×