என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட வன அதிகாரி கஷ்யப்ஷஷாங் ரவி உத்தரவு படி ஏற்காடு வனச்சரக அதிகாரி முருகன் தலைமையில் வனவர்கள் குஞ்சய் , சக்திவேல், தமிழரசன் மற்றும் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாழவந்திைய சேர்ந்த ரெங்கராஜ் (59) என்பவர் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

    பின்னர் சந்தன மரக்குற்ற வழக்கு பதிவு செய்து 2 பேருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக்காட்டில் சந்தன மரம் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லகவுண்டம்பட்டி 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜீவானந்தம் (32), இவருக்கு திருமணமாதாக நிலையில் பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    ஸ்டேண்டை எடுக்காமல்...

    இந்த நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. சைடு ஸ்டேண்ட் கீழே உரசியதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டு உயிருக்கு போராடினார்.

    பரிதாப சாவு

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் 29-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகர் செல்வதற்கு 80 அடியில் பிரதான சாலை உள்ளது.

    சாலை ஆக்கிரமிப்பு

    இந்த நிலையில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பணியை நிறுத்தகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மேட்டூர்- ஈரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    பணி நிறுத்தம்

    இதையடுத்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

     வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பாக உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

    • டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
    • தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே இரவில் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 238 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதே போல் அணையின் நீர்மட்டமும் 53.53 அடியை எட்டியது. தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9.80 மி.மீ. மழை பெய்தது.

    • பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    • அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பகுதியில் பணி புரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் எங்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்வதற்காக சேலம் அழைத்து வந்தார். அழகாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்த்தார். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட உரிமையா ளரிடம் கேட்டபோது பணியில் சேர்த்து விட்ட ராஜாவிடம் கேட்குமாறு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் 3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ளது. இதனால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல கூட முடியாமல் உள்ளளோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த நிலையில் போலீசார் ஒப்பந்ததாரரான ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு ராஜா மற்றும் வட மாநில தொழிலாளர்களை அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    • இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.

    சேலம்:

    கோவாவில் நடைபெற்று வரும் 37-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டெல்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி லக்னோவில் நடைபெற்ற ஓபன் செலஷன் டெரயல்ஸ் - ஓய்ல்டு கார்டு என்டீரி டேக்வாண்டோ போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் இருந்து 37-வது தேசிய அளவிலான விளையாட்டு டேக்வாண்டோ விளையாட்டில் பங்குபெற்றவர்களில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை அனுஷியா ப்ரியதர்ஷினி ஆவார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.

    அனுஷியா ப்ரியதர்ஷினிக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.

     வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் பங்கேற்று டாக்டர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புறநோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், யோகா பயிற்சி கையேடுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணா புரத்தை அடுத்த கரட்டுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.8,188 முதல் ரூ.8,690 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.8010 வரை விலை போனது. இரு முறை நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 குவிண்டால் அளவிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

    தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுப்புற விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நிலக்கட லையை எந்தவித கமிஷன் மற்றும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்திகொள்ளுமாறு வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு கார் டிரைவர் தப்பி சென்று விட்டார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே நங்கவள்ளியில் பட்டுச்சேலை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இந்த கடைக்கு பட்டு சேலை எடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் செல்வகுமார் கடைக்குள் சென்று அங்கு பட்டு புடவைகள் ஒவ்வொன்றாக எடுத்து மாடல் பார்த்தனர்.

    அவற்றின் விலையை கேட்டறிந்தபடி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் வசதியானவர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டு விலை உயர்ந்த பட்டு சேலை கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர். அதன்படி விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் ஒவ்வொன்றாக அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஒரு பெண் மட்டும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்ததை கண்ட கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது அந்த பெண் பட்டுச்சேலையை உள்ளாடையில் மறைத்து வைத்து வெளியே நிறுத்தி வைத்த சொகுசு காரில் திருடி வைப்பது தெரியவந்தது.

    உடனடியாக கடை உரிமையாளர் சந்திரசேகர் அந்த 2 ஆந்திர மாநில பெண்களையும் பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது வெளியே இருந்த சொகுசு காரில் டிரைவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் பட்டு சேலை திருடிய 2 பெண்களையும் அழைத்து வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் இங்கலூர் பேட்டையை சேர்ந்த ரந்தின (வயது 35), புவலட்சுமி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. சொகுசு காரில் தப்பி சென்ற டிரைவர் குறித்தும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பிடிபட்ட ரந்தின, புவலட்சுமி ஆகியோரை கைது செய்து இதுபோல் வேறு எங்கெல்லாம் குறி வைத்து பட்டுச் சேலைகளை திருடினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
    • நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பொதுமக்கள் ஜவுளி எடுக்க வந்திருந்தனர். இதனால் சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ்நிலையம், பேர்லேண்ட்ஸ் பகுதி உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது.

    நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர். அதே போல் இன்று காலை முதலே ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் தீவிர ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கண்காணிப்பு

    மேலும் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

    நேரம் செல்ல, செல்ல இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் நகை கடைகள், இனிப்பு கடை களிலும் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. ஜவுளி எடுக்க வந்தவர்களால் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதியது. 

    ×