search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The house caught fire"

    • ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
    • நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.

    இந்தநிலையில் ஏற்காடு மாரமங்களம் பஞ்சாயத்து கொம்புதூக்கி கூத்து முத்தல் கிராமம் மந்திரி தெருவை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராமன் (52) என்பவர் நேற்றிரவு வீட்டின் வெளியில் படுத்திருந்தார். வீட்டிற்குள் அவரது மனைவி தனம் (46), மற்றும் அவ ரது குடும்பத்தினரான ராஜேந்திரன் (29), சந்தியா (24), பிரபாகரன் (27), மகேஷ்வரி (24), வர்ஷிணி (3), கனிஷ்கா (1) ஆகியோர் படுத்திருந்தனர்.

    எரிந்து சாம்பல்

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் வீட்டில் வெளியில் படுத்திருந்த வெங்கட்ராமனின் கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் படுத்திருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

    ஆனால் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

      சேலம்:

      சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள் (வயது 75). இவரது வீட்டின் மேற்கூரை கீற்று கொட்ட கையால் வேயப்பட்டதாகும். இவர் சமீபகாலமாக திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

      இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் உள்ள அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கம் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் . ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

      இந்த தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
      • நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கரைப்பாளையம் பகுதி சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

      இந்நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீ மளமள–வென பரவி தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது.

      அதனால் தீயை அணைக்க முடியவில்லை .இது குறித்து சசிகலா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

      இருப்பினும் ரூ 3 லட்சம் மதிப்பிலான குடிசை வீட்டுக்குள் இருந்த துணி,மணிகள், உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், ஆவணங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

      • பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசமாயின.
      • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

      கடலூர்:

      பண்ருட்டி அருகே திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொழிலாளி. இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்து அனைவரும் கூலி வேலைக்காக சென்று விட்டனர். அப்போது வீட்டில் எதிர்பாராதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஏரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தீ மலமல வென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், பண்ருட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

      தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள், ஜமுனா ராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×