search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the investigation"

    • கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவர் நெய்வேலி சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் கண்ணனை சுற்றிவளைத்து சராமரியாக கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர். இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கடலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

    • பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசமாயின.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொழிலாளி. இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்து அனைவரும் கூலி வேலைக்காக சென்று விட்டனர். அப்போது வீட்டில் எதிர்பாராதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஏரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தீ மலமல வென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், பண்ருட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள், ஜமுனா ராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×