search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் கைதான கொலையாளிகள் கால் முறிவு: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    கால் முறிவு ஏற்பட்ட குற்றவாளிகளுக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடித்து வெளியில் அழைத்து வந்தபோது எடுத்தபடம்.

    பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் கைதான கொலையாளிகள் கால் முறிவு: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    • கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவர் நெய்வேலி சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் கண்ணனை சுற்றிவளைத்து சராமரியாக கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர். இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கடலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

    Next Story
    ×