சேலம் அஸ்தம்பட்டியில் மூதாட்டியின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

சேலம் அஸ்தம்பட்டியில் மூதாட்டியின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
Published on

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள் (வயது 75). இவரது வீட்டின் மேற்கூரை கீற்று கொட்ட கையால் வேயப்பட்டதாகும். இவர் சமீபகாலமாக திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் உள்ள அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கம் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் . ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com