search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver goods"

    • சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
    • இதனை‌ நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை, குகை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு என்பதால் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்வார்கள். இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    வாழ்வாதாரம் பாதிப்பு

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் வெள்ளிப் பொருட்கள் அதிக அளவில் வாங்குவார்கள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

    இதனால் வழக்கத்தை விட வெள்ளி ஆர்டர்கள் குறைந்துள்ளதால் வெள்ளி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    5 மாநிலங்களில் தேர்தல்

    இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை நல சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது,

    வெள்ளி பொருள்களுக்கு பண்டிகை காலங்களில் ஆர்டர்கள் அதிகமாக கிடைக்கும். அதன்படி தீபாவளியை முன்னிட்டு வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் ஆர்டர்கள் குறைந்துள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஆர்டர்கள் வழங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கான ரசீது இருந்தாலும் தேர்தல் அதிகாரிகளால் சில நேரங்களில் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

    தெலுங்கானா மத்திய பிரதேசத்தை கடந்துதான் பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 50 சதவீதம் மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் .மேலும் கடந்த 4-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய். பார்வெள்ளி ஒரு கிலோ 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .

    இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமிற்கு 20 காசு உயர்ந்து 77 ரூபாய் 20 காசுக்கும், பார்வெள்ளி 200 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது .

    வேலை இழப்பு

    தேர்தல் அறிவிப்பு மற்றும் நிலையற்ற வெள்ளி விலையால் வெள்ளி விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் வெள்ளி தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் இனிவரும் நாட்களில் தேர்தல் கமிஷன் வெள்ளி தொழிலாளர்கள் போதுமான ஆதாரங்கள் வைத்திருந்தால் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்த்து வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    காரைக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி பகுதியைச்சேர்ந்தவர் காந்தி (வயது 65). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பணியாட்களை வைத்து மராமத்து பணிகளை மேற் கொண்டார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய காந்தி நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    இதேபோல் காரைக்குடி முடியரசன் சாலையை சேர்ந்தவர் குமாரவேல் (41). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருச்சி ரோட்டில் உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென்று குமாரவேல் ஓட்டிவந்த சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறிய அவர் தனது மனைவியுடன் கீழே விழுந்தார்.

    பின்னர் அந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு குமாரவேல் மனைவி அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது. இந்த தாக்குதலில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    ×