என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில்வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர் கூட்டம்
- சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது.
- இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி ெதாடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது பெயர் , நிறுவன முகவரி, வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விபரங்களை நாளை மறுநாள் (9-ந்தேதி) -க்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் ெதாடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம். இந்த தகவலை சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story






