என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
- தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.
- போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா அ.புதூர் கிராமம் சுண்டமேட்டூரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மகன் நவீன் (வயது 25). போலீஸ்காரர்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நவீன் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு வீட்டிற்கு ஓடி வந்து பார்த்த அவரது அண்ணன், தனது தம்பி நவீன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு நவீனை கொண்டு சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நவீன் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்