என் மலர்tooltip icon

    சேலம்

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சங்ககிரி:

    கோவை தெற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக கோவை புளியகுளத்தைச் சேர்ந்த வட்டச் செயலாளர் வாசுதேவன்(47) உள்பட 20 பேர் நேற்று இரவு கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி சொகுசு பஸ்சில் சென்றனர்.

    பஸ்சை கோவை துடியலூரைச் சேர்ந்த டிரைவர் சங்கர் (40) ஓட்டிச் சென்றார். இரவு 1:45 மணிக்கு சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டாரஸ் லாரியின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பகுதி முழுவதும் சிதைந்து சேதம் அடைந்தது. விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவை புளியகுளத்தை சேர்ந்த மல்லேஸ்வரி (23), வெங்கடேஷ் (26), மாரிமுத்து (44), பவன்சாய் (44), தீனதயாளன் (45), ஜோசி (48), பிரகாஷ் (43), சுரேந்திரபாபு (35), ஐயப்பன் (48), வெங்கட்ராஜ் (49), ஜான்சன் (52), வாசுதேவன் (46), சசிகுமார் (46), சீனிவாசன் (48), ராஜ்குமார் (47) ஆகிய 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் அவசரக்கால மருத்துவநுட்பர் ராமச்சந்திரன், பைலட் சரவணகுமார் ஆகியோர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இடுபாட்டில் சிக்கி இருந்த பஸ் டிரைவர் சங்கரை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த எஸ். பிருந்தா பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று எஸ்.பிருந்தா சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் விஜயகுமாரி மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.
    • இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    சேலம்:

    சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.

    311 பேர் தேர்வு

    இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியி டத்திற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

    இதையொட்டி சேலம் ஆயுதப்படை மைதா னத்தில் காலை 7 மணிக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியயை நடைபெற்று வருகிறது. இதில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டப்பந்தயத்தில் ஓடினர். பாதியில் நின்றவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கூடுதல் பாதுகாப்பு

    நாளை (8-ந் தேதி) உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் உடல் தகுதி தேர்வு நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த ஒருமாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 53.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2702 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நான் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். நான் இந்த மருத்துவமனைக்கு வந்த புதிதிலும் இதே போல மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பணியின்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் பணியை சரியாக செய்தபோதும் வேண்டுமென்றே கண்டிப்பது போல திட்டிவிட்டு பின் ஏன் என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு இதேபோன்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கண்டனம்

    இதையொட்டி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் மேலும் அந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:- பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    அதேபோல் களி மண்ணால் ஆன மண்பானை மற்றும் அடுப்பினை தமிழக அரசே கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய தேவையான களிமண்ணை அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏரிகள், ஆற்றில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    தமிழக அரசின் காதிகிராப்ட் விற்பனை பிரிவு அலுவலகத்தில் நிரந்தரமாக மண்பாண்டத்தினால் ஆன பொருட்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதியை மற்ற சமுதாயத்திற்கு கொடுத்தது போல் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசிக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அருகே குட்டப்பட்டி அம்மன் கோவிலூரை சேர்ந்தவர் ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    என் மனைவி லட்சுமிக்கு 65 வயதாகிறது. நரசிம்மன், வெங்கடாஜலபதி,கிருஷ்ண மூர்த்தி என 3 மகன்கள் உள்ளனர். குட்டப்பட்டி கிராமத்தில் 4.79 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தை எனக்கு, மகன்களுக்கு என 4 பாகங்களாக பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மோசடி

    இதற்காக மேச்சேரி சார்பதிவாளர் அலுவ லகத்துக்கு சில வருடத்திற்கு முன்பு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

    10½ சென்ட் நிலத்தில் நான் குடியிருந்து வரும் நிலையில் அதில் உள்ள பழைய வீடு அவர்களுக்கு பாகமாக காண்பித்து என்னை மோசடி செய்துள்ளனர். பத்திரப் பதிவு செய்யும்போது படித்து பார்க்க வில்லை. எனது பாகத்தை சரிவர ஒதுக்கீடு செய்யாமல், அவர்கள் மட்டுமே பிரித்து கொண்டு என்னை மோசடி செய்துள்ளனர்.

    இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தோம். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி மாதம் தோறும் எனக்கும், மனைவிக்கும் 3000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டனர்.

    கருணை கொலை

    இதையடுத்து வீட்டிற்கு வந்த எனது மகன்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். நான் பணம் தர முடியாது என மிரட்டுகின்றனர். தற்போது உணவுக்கு வழியில்லாமலும் மருந்து, மாத்திரை வாங்கக்கூட பணம் இல்லாமல் நானும், மனைவியும் அவதியுற்று வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாள்தோறும் உணவு அருந்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ செலவிற்கு பணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவ லர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டும னைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகர ணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 332 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் தூய்மையாக இருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்வதுடன் தங்கள் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.
    • தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    போலீஸ் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.

    உடல் தகுதி தேர்வு

    தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அவர்களுக்கு அழைப்பு கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த உடல் தகுதி தேர்வில் 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 311 பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், வட்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆலோசனை

    இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் உடல் தகுதி தேர்வுக்கு வருபவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பட்டர் பிளை மேம்பாலம் முகப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

    தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
    • இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்றிரவும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் நேற்று பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வி வசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 9.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    வானிலை எச்சரிக்கை

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 6-ந் தேதியான இன்றும், நாளையும் (7-ந் தேதியும்) இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ×