search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கானஉடல் தகுதி தேர்வில் 2-வது நாளில்திரளான பெண்கள் பங்கேற்பு
    X

    சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதபடை மைதானத்தில் 2-வது நாளாக இன்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் நீளம் தாண்டுதல் மற்றும் குண் எறிதல் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய பெண்கள்.

    பெண் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கானஉடல் தகுதி தேர்வில் 2-வது நாளில்திரளான பெண்கள் பங்கேற்பு

    • பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் காலியாக உள்ள பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தில் 316 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், எடை, உயரம் அளவு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

    2-வது நாள்

    நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்று 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அனைத்து போட்டி களையும் காவல்துறை சார்பில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கண்காணிப்பு

    இந்த போட்டியினை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தேர்வாளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் காவல்துறை சார்பில் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வினை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×