search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physical Fitness Test"

    • பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

     சேலம்:

    தமிழகத்தில் காலியாக உள்ள பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தில் 316 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், எடை, உயரம் அளவு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

    2-வது நாள்

    நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்று 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அனைத்து போட்டி களையும் காவல்துறை சார்பில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கண்காணிப்பு

    இந்த போட்டியினை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தேர்வாளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் காவல்துறை சார்பில் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வினை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது.
    • 2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பணியி டங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் இருந்து 417 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் ஏற்கனவே பணியில் உள்ள போலீசார் ஆவர். அனைவரும் சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உடல் தகுதி தேர்வை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் பார்வையிட்டனர். முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது. பின்னர் 1500 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை உடல் தகுதி தேர்வு நடந்தது.

    2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது. இதில் நீளம், உயரம் தாண்டுதல் , கயிறு ஏறுதல் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் வழங்கப்படும்.

    • காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
    • எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்கள் அதிகாலையிலேயே ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் காவல்துறை யில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணி யிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    உடல் தகுதி தேர்வு

    அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு பாளையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 302 பெண் தேர்வர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.

    இந்த தேர்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட மாக மருத்துவ பரிசோதனை க்கும், நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படு வார்கள்.

    பணி ஆணை

    பின்னர் அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்படும். இந்நிலையில் இன்று உடற்தகுதி தேர்வு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இதற்கான பணிகள் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணகுமார் உள்ளிட்டோர் கண்காணிப் பில் நடை பெற்றது.

    இந்த உடல் தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடக்கிறது. இதற்காக எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்கள் இன்று அதிகாலை யிலேயே ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். தொடர்ந்து தேர்வில் ஆர்வமாக பங்கேற்று ஓடினர்.

    • பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.
    • இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    சேலம்:

    சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கு ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது.

    311 பேர் தேர்வு

    இதில் சேலம் மாவட்டத்தில் 311 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியி டத்திற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

    இதையொட்டி சேலம் ஆயுதப்படை மைதா னத்தில் காலை 7 மணிக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியயை நடைபெற்று வருகிறது. இதில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டப்பந்தயத்தில் ஓடினர். பாதியில் நின்றவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கூடுதல் பாதுகாப்பு

    நாளை (8-ந் தேதி) உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் உடல் தகுதி தேர்வு நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு பாளை ஆயுத படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது.
    • பாளை தனியார் பள்ளியில் பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.

    நெல்லை:

    தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தீயணைப்புத்துறை, சிறைத்துறை, காவல்துறை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு பாளை ஆயுத படை மைதானத்திலும், பெண்களுக்கு பாளை தனியார் பள்ளியி லும் தேர்வுகள் தொடங்கி யது. இதற்காக 1,159 ஆண்களுக்கும், 544 பெண்களுக்கும் அழைப் பாணை அனுப்பப்பட்டது.

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் முதல் நாளான நேற்று 351 பேர் கலந்து கொண்ட நிலையில், இன்று 2- வது நாளாக 400 பேருக்கு அழைப்பு விடுக்கபட்டது. அதில் 340 பேர் பங்கேற்றனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உயரம், எடை அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தைய போட்டி நடந்தது. அதனை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை கயிறு ஏறும் போட்டி நடத்தப்படும். இதேபோல் பாளை தனியார் பள்ளியிலும் 2- வது நாளாக பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று 235 பேர் கலந்து கொண்ட நிலையில் இன்று மேலும் 210 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடத்தப்பட்டது.

    • தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.
    • பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

    கோவை,

    தமிழ்நாடு தேர்வாணை யம் மூலம் 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.

    இதில் பங்கேற்க மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் நடைபெற்றது.

    நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 185 பெண்கள் இன்று தேர்வில் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் சரிபார்த்தல் போன்ற தேர்வுகள் இன்று நடந்தது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தேர்வில் 316 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.தேர்வுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.
    • 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 345 பேர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை பிரிவில் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு உள்ள 3,552 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வெளியிடப்பட்டது.

    உடல் தகுதி தேர்வு

    அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27-ந் தேதி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று பாளை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து 11-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக 1159 பேருக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது.

    இதில் முதல் முதல்நாளான இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 345 பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதற்காக 544 பேருக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. இன்று 235 பேர் கலந்து கொண்டனர்.

    டி.ஐ.ஜி, கமிஷனர்

    ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் மேற்பார்வையிலும், பெண்களுக்கான தேர்வு மாநகர கமிஷனர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா ஆகியோர் மேற்பார்வையிலும் நடந்தது. 

    ×