search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் வாட்டி வதைக்கும் குளிர்
    X

    ஏற்காட்டில் வாட்டி வதைக்கும் குளிர்

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் கன மைழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் முதல் தலைவாசல் வரை அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் அதிக அளவில் திரண்டு பார்வையிட்டு செல்கிறார்கள்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்த படியே இருந்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து இரவில் கடும் குளிர் நிலவியது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் தொடங்கிய மழை இன்று அதிகாலை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 36.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 16.2, சேலம் 8.2, தலைவாசல் 7, வீரகனூர் 7, காடையாம்பட்டி 7,ஏற்காடு 4.4, ஓமலூர் 4, கரியகோவில் 4, ஆனைமடுவு 4, மேட்டூர் 3.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 1, ஆத்தூர் 1, பெத்தநாயக்கன்பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×