வேளாண்மை துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அருள் எம்.எல்.ஏ தர்ணா போராட்டம்

சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் அதிகாரியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருள் எம்.எல்.ஏ.
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் அதிகாரியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருள் எம்.எல்.ஏ.
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

போராட்டம்

இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேளாண் துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் சேலம் மாவட்ட வேளாண் அதிகாரி இ-நாம் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளுக்கு வெளி மார்க்கெட்டுகளை விட கூடுதல் விலை நிர்ணயிப்பதாகவும், விவசாயிகள் அல்லாத நபர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து உழவர் சந்தை மூலம் விற்பனை செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகள் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த நிலையில் அவரையும், அவருக்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 மாதத்தில் அவரை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று அருள் எம்.எல்.ஏ கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com