என் மலர்tooltip icon

    சேலம்

    • மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், இந்திய குற்றவியல் சட்ட ஆகிய முப்பெரும் சட்டங்களை இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வக்கீல்கள் சிவராமன், இனியன், பீட்டர் ராஜ், பூபதி , கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (85), பெங்களூரு விமான நிலையத்தில் அதிக ாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி வசந்தா (60) என்பவருடன் வசித்து வந்தார்.

    சாப்ட் வேர் என்ஜினீயர்

    இவர்களது மகன் திலக் (38), சாப்ட்வேர் என்ஜினீ யரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்த படியே பணிபுரிந்து வந்தார். மேலும்

    ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.இவரது மனைவி மகேஷ்வரி (33), இவர்களது மகன் சாய் கிரிஷாந்த் (6), இந்த சிறுவனுக்கு வாய்பேச முடியாது. இந்த நிலையில் பெங்க

    ளூருவில் உள்ள சகோதரர்

    சந்துருவுக்கு வாட்ஸ் அப் மூலம் குழந்தையை குணப்படுத்த முடியாததா லும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக திலக் தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று காலை போலீசார் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    4 பேர் சாவு

    அப் போது திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். வசந்தா மட்டும் உயிருக்கு போராடிய படி கிடந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதனை பார்த்த போலீசார் வசந்தாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டத்தால் திலக் 4 பேருக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திைர கொடுத்து கொலை செய்து

    விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது.
    • சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.

    மேம்பால நகரம்

    மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.

    ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    முள்ளுவாடி ரெயில்வே கேட்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.

    இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேம்பாலம்

    கட்டும் பணி தொடக்கம்

    இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.

    தாமதம்

    3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

    இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.

    அணை மேடு பாலம்

    இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .

    குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    நீண்ட நாள் எதிர்பார்பு

    ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 970 கன அடியாகவும், நீர்மட்டம் 75.72 அடியாகவும் உள்ளது.

    அதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 491 கன அடியாகவும், நீர்மட்டம் 103.20 அடியாகவும் உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 11 ஆயிரத்து 720 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வெகுவாக சரிந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 978 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று காலையில் 55.75 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 55.48 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட வாய்ப்புள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
    • இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் இவரது பேத்தி மைஸிகாபேரன் சர்வன் ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அன்னதானப்பட்டி;

    சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). இவரது பேத்தி மைஸிகா (9), பேரன் சர்வன் (5) ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நடராஜன் தனது பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளி மலர் வகையை சேர்ந்த ‘பிரம்ம கமலம்’ செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.
    • கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

    சேலம்:

    வறண்ட நிலங்களில் வளரும் கள்ளி மலர் வகையை சேர்ந்த 'பிரம்ம கமலம்' செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.

    இந்த பிரம்ம கமலம் மலர்களைப் போலவே, வாழப்பாடி பகுதி கிராமங்களில் தரிசு நிலங்களில் காணப்படும் கள்ளிச் செடிகளிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெண்ணிறத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும் கள்ளி மலர்கள் பூத்து வருகின்றன. கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில், கல்யாணகிரி, சிங்கிபுரம், தமையனுார், மன்னாயக்கன்பட்டி கிராமங்களில், மானாவரி விளைநிலங்களின் வேலியோரங்களிலும், கல்லாங்குத்து தரிசு நிலங்களிலும் காணப்படும் கள்ளிச்செடிகளில், தற்போது வெண்ணிற மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன.

    பிரம்ம கமலம் மலரை போல இரவில் பூத்து பகலில் வாடும் இந்த கள்ளி மலர்களை, ஆன்மிக பக்தர்களும், பொதுமக்களும் பிரமிப்போடு பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த கள்ளி மலர்களை பறித்துச் சென்று கிராம தெய்வங்களுக்கு பூஜை செய்து வருகின்றனர். 

    • குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
    • மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் புறநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    நேற்று முன்தினம் குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு கையில் தையல் போடுவதற்காக டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர் நளினி என்பவர் கிருஷ்ணமுர்த்திக்கு தையல் போட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி கெங்கவல்லி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். உரிய விளக்கம் அளித்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.

    • வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.
    • தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் உடலை மீட்ட தீவட்டிப்பட்டி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.

    விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆந்திர மாநிலம் பாலசேரன் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் வாலிபர் இறப்பு குறித்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்துகிறோம் என்றனர்.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
    • சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது 85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களது மகன் திலக் (வயது 38). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு வீட்டில் இருந்தபடி சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    திலக்குக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மகேஷ்வரி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சாய்கிரிசாந்த் (6) என்ற மகன் உள்ளான்.

    இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தது.

    ஒரே மகன் என்பதால் பாசத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் சாய்கிரிசாந்த்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர். மகனை குணப்படுத்த பல்வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை.

    இதற்கிடையே திலக் மருத்துவ செலவு, குடும்ப செலவிற்கு பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆன்லைன் வர்த்தகம் தொடங்க கடன் வாங்கினார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதனால் திலக் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென தெரியாமல் தவித்தனர்.

    இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குழந்தையை குணப்படுத்த முடியவில்லையே என சோகத்தில் மூழ்கினர். இதனால் திலக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு திலக் தனது பெற்றோர் சிவராமன்-வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்தார். அவர்கள் விஷத்தை குடித்தனர். இதையடுத்து திலக் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் தனது குழந்தையை குணப்படுத்த முடியவில்லை. மேலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    இதனிடையே விஷம் குடித்த சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதில் வசந்தா மயங்கி நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இன்று காலை அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல் மற்றும் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வசந்தாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவசர வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே வீட்டில் சோதனை மேற்கொண்டதில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதிலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என உருக்கமாக கூறியுள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×