என் மலர்tooltip icon

    சேலம்

    • நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

    திடீர் மழை

    இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது.

    67.4 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 33.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 13, கெங்கவல்லி 10, மேட்டூர் 6.2, தம்மம்பட்டி 4, காடையாம்பட்டி 1 மி.மீ என மாவட்டம் முழுவதும் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
    • போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    புகார்

    இந்த நிலையில் தனியார் பஸ்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹா ரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், ராமரத்தினம், மாலதி ஆகியோர் இன்று காலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

    ரூ.10 ஆயிரம் அபராதம்

    இதில் 50 -க்கும் மேற்பட்ட பஸ்களின் ஏர்ஹாரன் சோதனை செய்யப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை தனியார் பஸ்கள் மட்டுமின்றி, பிற வாகனங்களில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்ப டையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி பயன்படுத்துவது தெரிய வந்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    விபசார புகார்

    ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து விபசாரம் நடப்பதாக சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அமல அட்மின்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ஏற்காடு பக்கோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில் மூன்று இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    2 பேர் கைது

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் டி.எஸ்.பி. அமல அட்மின் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு டி.எஸ்பி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    இந்த ரிசார்ட்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அந்த ரிசார்ட் மேலாளர் ரகுநாத் (20) ஆகியோைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேரையும் சேலம் கோர்ட் வளாக த்தில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    எச்சரிக்கை

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டி.எஸ்.பி. அமல அட்மின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
    • சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி பகுதியை சேர்த்தவர் ராஜா. இவரது மகன் மாதேஷ் (23). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மாதேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மின் விளக்கை ஒளிர விடாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சுகாதார வசதிகளுடன் பயனாளிகள் வரவேற்பு அறை, தாமரைக்குளம், மூலிகைத் தோட்டத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
    • வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முயற்சியால் வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1000 அரிய நூல்களை கொண்ட புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

     வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பேளூரில் சிறந்த கட்டமைப்பு, சுகாதார வசதிகளுடன் பயனாளிகள் வரவேற்பு அறை, தாமரைக்குளம், மூலிகைத் தோட்டத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. மேலும் தேசிய தரச் சான்றிதழ் பெற்றதோடு மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தது. இதையொட்டி மத்திய அரசு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியது.

    புதிய நூலகம்

    இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முயற்சியால் வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1000 அரிய நூல்களை கொண்ட புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் தமிழ்மணி நூலகத்தை திறந்து வைத்தார்.

    இவ்விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், டாக்டர் மோதிலால், தேவராஜன் மண்டல தலைவர் பாபு, வட்டார தலைவர் ஜவஹர், கந்தசாமி, கலைஞல் புகழ் பன்னீர்செல்வன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நோயாளிகள், உடனாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு உதவிடும் நோக்கில் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூலகம் திறக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது.
    • தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி முட்டை விலை ரூ. 4.95-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 5.00 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை (பைசாவில்) சென்னை 560, பர்வாலா 517, பெங்களூரு 550, டெல்லி 533, ஐதராபாத் 510, மும்பை 570, மைசூர் 555, விஜயவாடா 533, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 600.

    வழக்கமாக புரட்டாசி மாதம் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதனால் கறி , முட்டை சாப்பிட மாட்டார்கள். இதனால் அதிக அளவில் கறி மற்றும் முட்டைகள் தேக்கம் அடையும், விலையும் குறையும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக முட்டை விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் முட்டை கோழி வளர்ப்பு குறைந்துள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    முட்டை விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது,

    நாமக்கல் மண்டலத்தில் வழக்கமாக 6 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்படும், தற்போது முட்டை கோழி தீவனம் விலை உயர்ந்துள்ளதால் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் 6 கோடிக்கும் மேல் முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது ஒரு கோடி முட்டை உற்பத்தி குறைந்து 5 கோடியாக சரிந்துள்ளது. இதனால் முட்டை விலை அதிகரித்து வருகிறது என்றனர்.

    • அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து 607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 607கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணை நீர்மட்டம் 76.52 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 1261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    • அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பாலம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (25), இவர் காகாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்தி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.
    • புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் ஆகிய 3 மலைக் கோவில்கள் அமைந்துள்ளன.

    புரட்டாசி மாத திருவிழா

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய முறைப்படி திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை யொட்டி நடைபெற்ற இத்திருவிழாவில் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமன் சாமிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி நிழலில் பூஜை பொருட்களை கொண்டு சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. பெலாப்பாடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும் பாத யாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்க ளிலும், சுற்றுப்புற கிராம மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்க ளுக்கு பொங்கல் உருண்டைச்சோறும், முன்னோர் வழியில் மொச்சை, அவரைக் கொட்டை குழம்பும் கோவில் பிரசா தமாக அன்னதானமாகவும் வழங்கப்பட்டது.

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    • புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை
    • போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம்

    சேலம்

    சேலம் மத்திய ஜெயிலில் 300-க்கும் மேற்பட்ட சிறை பணியாளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காகவும் அவர்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் மேம்பாட்டிற்காகவும் சிறை துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி மையமும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை மற்றும் அரசு போட்டி தேர்வு மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பகல் காப்பகம் மற்றும் சிறப்பு கல்வி நிலையங்களை பார்வையிட்டார். 

    பின்னர் இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் கூறியதாவது:-

    சிறைத்துறை சார்பில் தற்போது சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம் என ெதாடங்கப்பட்டுள்ளது. கணவன்- மனைவி பணிக்கு சென்ற நிலையில் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் காப்பகமும், சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் 9-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகள் நல்ல முறையில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இலவச சிறப்பு டியூஷன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் படித்து பயன் பெறலாம். மேலும் சிறை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர் கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள், சிறை ஊழியர்கள், வார்டன்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    ×