என் மலர்
சேலம்
- ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார்.
- தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர் செல்வகுமார் (42), டாக்டரான இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தகம் நடத்தி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
நேற்று பிற்பகல் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்நது செல்வகுமாரின் தந்தை வையாபுரி மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது செல்வ குமாரின் மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்ததும், தற்போது அவர் வேலூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருவதும், மகள் சென்னையில் படித்து வரும் நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக இருந்த செல்வகுமார் மன வேதனையில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.
- கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
- தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சங்ககிரி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சின்னபள்ளத்து சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கேபிள் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி லதா (வயது 41). இவர் கடந்த 4-ந் தேதி மாயமானார்.
இதுகுறித்து கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சங்ககிரி புதிய எடப்பாடி ரோட்டில் உள்ள சந்தைப்பேட்டை செல்லியாண்டி அம்மன் கோவில் கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் தெரிந்து அங்கு சென்று பார்த்த பிரகாஷ், கிணற்றில் கிடப்பது தனது மனைவி தான் என உறுதி செய்தார்.
இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாழப்பாடி:
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இத்திட்ட பயனாளிகளின் (கே.ஓய்.சி) ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவன ஊழியர்கள் இணைய வசதி கொண்ட செல்போன், மடிக்கணினியுடன் சென்று பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் வாழப்பாடி பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக, ஒரு நபருக்கு ரூ. 30 வீதம் பணமும், ஆதார், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் வசூலித்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்திய தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பணம் மற்றும் ஆவணங்கள் வங்கியது உண்மை என தெரியவந்ததால், தனியார் நிறுவன ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், பணத்தையும், ஆவணங்களையும் பொதுமக்களிடமே திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.
- அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் இந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முப்போக விளைச்சலுக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 5 மாதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 10 டி.எம்.சிக்கும் கீழே குறைந்ததால் நேற்று காலை முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 334 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 8.70 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதில் 6 டி.எம்.சி. குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். எனவே மீதி உள்ள 2.7 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். நீர்வரத்தை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
- சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
சேலம்:
சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோ ர்களும் தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி மோகன் இன்று காலை பள்ளியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரி யரிடமும் விசாரணை நடத்தி வரு கிறார். இத னால் பள்ளியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
- கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரப்பன் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
சேலம்:
சேலம் வெள்ளி கொலுசு கலைநயங்களுடன் தயாரிக்கப்ப டுவதால் அதற்கென தனி மவுசு உண்டு.இதனால் சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் வெள்ளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகளும், அதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிக மான தொழிலாளர்களும் உள்ளனர். குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, நங்க வள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கொலுசு பட்டறைகள் உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் சேலத்தில் கொலுசு, தண்டை, அரைஞான் கொடி உள்பட வெள்ளி நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதனால் தற்போதே வெள்ளி கொலுசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் 74 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி தற்போது 69 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட நகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தற்போது வெள்ளி நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் வெள்ளி தொழில் சுறு சுறுப்பு அடைந்துள்ளது. இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்ப தால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளி பட்டறையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
- நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
150 சிறப்பு பஸ்கள்
இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்க ளில் நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்க ளுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணா மலையில் இருந்து பெங்களு ருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூ ருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சி புரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்க ளூருவுக்கும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனை வரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழிப்பறியில் தொடர்புடைய காரைக்குடி அருகே கோட்டை யூர் அடுத்த வேளாண்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (32), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விஸ்வாரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோர் வேறொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் இரு வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்டு அனுமதி அளித்ததன் பேரில் சூரமங்கலம் போலீசார் பாண்டியன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது.
- சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் வேன், கார்கள் உள்பட தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
பரபரப்பாக இருக்கும்
வாழப்பாடியில் பஸ் நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியர் மாளிகை, தபால்நிலையம், வேளாண் விற்பனை நிலையம், போலீஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை பிரதான கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இந்த இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
சாலை புதுப்பிப்பு
சேலம்- –சென்னை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் போது வாழப்பாடியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த கடலூர் சாலையை விரிவுபடுத்தாமல் முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ. தூரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
இருப்பினும், கடலூர் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுக்கு மேலாக குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடந்த இச்சாலையை புதுப்பிக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ தூரம் கடலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த மாத இறுதியில் புதுப்பித்தது. இச்சாலையை மாநில நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது.
வேக தடைகள் அமைக்க கோரிக்கை
சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், கடைவீதி, மன்னாயக்கன்பட்டி பிரிவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பேளூர் பிரிவு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான கடலூர் சாலையில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் சீராக செல்ல சாலை தடுப்புகள் அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
- அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
விளை நிலங்கள்
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.
ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 2000 ஏக்கர் ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகிறது.
சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு பெய்த பருவ மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி 50.52 அடியை எட்டியது.
அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
இதையடுத்து வாய்க்கால் பாசன மற்றும் ஆற்றப்படுகை கிராம விவசாயத்திற்காக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அணையில் இருந்து பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாதம் இறுதியில் அணையின் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது.
இதனிடையே தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை. தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் மாறாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்தது. தற்போது அணையில் நீர்மட்டம் 18.37 அடி உள்ளது.
காத்திருக்கும் விவசாயிகள்
27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் குட்டை போல தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கவலையடைந்துள்ள கரியகோவில் அணை மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது.
- கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பூலாம்பட்டி செல்லும் மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்ற மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காவிரி கரையோர பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டுவதால் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.






