என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

    இவர் ஆத்தூர் புறவழிச்சாலை அருகே உள்ள பெரியாண்டிச்சி கோவில் பகுதியில் டிவி பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இரவு 11 மணியளவில் அவருடைய பூட்டிய கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் மற்ற இடத்திற்கு பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
    • மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிழலை தேடி ஓடினர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் உஷ்ணத்தால் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.

    சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சேலம் 4 ரோடு, சங்கர் நகர், புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகப்பட்டி, ஜங்சன், பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்த படியே சென்றனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு 11 மணியளவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழையாக கொட்டியது. நள்ளிரவு வரை பெய்த இந்த மழையால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கிச்சிப்பாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அத்வைத ஆசிரம ரோடு, சங்கர் நகர், சூரமங்கலம், ஜங்சன் உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஆறாக ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 82.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனைமடுவு 52, ஓமலூர் 24, கரியகோவில் 5, மேட்டூர் 2.2, பெத்தநாயக்கன்பாளையம் 1.5, ஏற்காடு 1.4, சங்ககிரி 1.3, எடப்பாடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 171.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பிரசாந்த் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தாய் மாமன் முருகேசனின் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்த முருகேசனின் மகள் திடீரென காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனின் மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பவானியில் உள்ள குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 2-ந்தேதி இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் இரு தரப்பையும் அழைத்து வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால், சிறுமியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பிரசாந்த் தனது தாய்மாமன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மீண்டும் தனது மகளை அழைத்து செல்ல வந்ததாக கூறி முருகேசன் குடும்பத்தினர் பிரசாந்த்துடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசன் (52), அவரது மனைவி முத்தம்மாள் (45), முருகேசனின் தம்பி சிவக்குமார் (50), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகேசன் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
    • பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும்.

    சேலம்:

    பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டு கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடி அளவில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி தீவிரமாக மேற்கொண்டனர்.

    இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்.

    ஆனால் நடப்பு ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. அதுமட்டும் அல்லாமல் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் முதல் இன்று வரை 125 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். இந்த தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. ஆனால் 46 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து பெயரளவிலேயே தண்ணீர் திறந்து விட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 163 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே மேட்டூர் அணையில் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் 30 அடி வரை தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும்.

    இதனால் குடிநீர் மற்றும் மீன் வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது.

    அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதங்களுக்கு பிறகு இன்று நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் இதுவரை 91 டி.எம்.சி. அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், வேலூர், காடையாம்பட்டி ஆகிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தினாலும் குடிநீர் தேவைக்கு மாதம் 2 டி.எம்.சி வரை டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அணையில் தற்போது 8 டி.எம்.சி தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது என்றார்.

    • ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது.
    • போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் அதிக அளவில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தப்படுவதும் அதனை தடுக்க ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு கைது செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜு மற்றும் போலீசார் முனுசாமி, பிரபாகரன், ஆகியோர் ரெயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா? என தன்பாத் விரைவு ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இன்று அதிகாலை சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் கருப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது எஸ்.1 கோச்சில் கழிவறை அருகில் சோதனை செய்தபோது கருப்பு கலர் சோல்டர் பேக் தனியாக கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதன் அருகில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா கடத்தி வந்ததை ஒத்துக்கொண்டார். மேலும் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள நடூர் திரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ஜப்ரில் என்பவரது மகன் அப்துல் முஷீத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரை சோதனை செய்தபோது ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் அப்துல் முஷீத் சப்-இன்ஸ்பெக்டர் என்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு போலியாக சப்-இன்ஸ்பெக்டர் என்று அடையாள அட்டை தயாரித்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
    • இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சித்ரா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி காந்திநகர் பகுதி சேர்ந்தவர் மாரியப்பன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன் தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (23), லோகநாதன் மகன் கோபி (32), மற்றும் ரவி, ஆறுமுகம் ஆகியோர் சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    இதைக் கண்ட மாரியப்பன் ஏன் இங்கே உட்கார்ந்து மது குடிக்கிறீர்கள்? மேலும் காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாரியப்பனை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ரவி மற்றும் ஆறுமுகத்தை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஹரிபிரியா நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீசார் ஹரிபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்வினியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டுக்குட்டப்பட்டி, கருத்தா னூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பா ளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. இத்த கவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    இதே போல் உடையாபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10-ந்் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்தரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.

    • விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல இப்பள்ளியின் 2 பஸ்கள் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது.

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பஸ்கள் கடக்க முயன்றபோது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று, இந்த 2 பள்ளி பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் பலமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் பள்ளி பஸ்கள் விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் விபத்து நடந்த பகுதியில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ×