search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீர் என நினைத்து களைக்கொல்லி மருந்தை குடித்த ஆசிரியர் பலி
    X

    தண்ணீர் என நினைத்து களைக்கொல்லி மருந்தை குடித்த ஆசிரியர் பலி

    • அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பாலம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (25), இவர் காகாபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூக்க கலக்கத்தில் எழுந்த கார்த்தி தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்தி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×