என் மலர்tooltip icon

    சேலம்

    • ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
    • வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள வள்ளல் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி வீட்டுக்கு அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோஜ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் கஸ்பா திருமலைபட்டி தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37) என்பவரை இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
    • அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.

    சேலம்:

    ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.
    • இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 39). மாந்திரீகர்.

    நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.

    கொலை

    இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மர்ம சாவு என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவ இடத்தை சேலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் கம்பியால் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கியுள்ளதாக தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் முத்துராஜ் மாந்திரீகம் செய்து குழந்தைகளுக்கு தாயத்து கட்டி வந்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 பேர் சிக்கினர்

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தான் மாந்தீரிகரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். விசாரணை முடிவில் மாந்தீரிகர் கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது. 

    • உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
    • தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகிலேயே கால்நடை மருத்துவமனையும் செயல்படுகிறது. இங்கு நாய், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை கண்ட கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.

    இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரகுபதி விரைந்து வந்தார். தீ ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் அவர் கூறுகையில், இந்த அலுவலகத்தில் நான் உள்பட 5 ஊழியர்கள் பணி புரிந்து வருகிறோம். காலை 8.30 மணியளவில் அலுவலகத்தில் கரும்பு புகை வந்துள்ளதை கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு சில ஆவணங்கள் எரிந்துள்ளது. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது தாய் மீன்கள் முட்டையிட்டு முட்டையிலிருந்து வெளிவரும் நுண் மீன் குஞ்சுகளை பிற வகை மீன்களால் உண்ணப்படுவதால் மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன் இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நாட்டின மீன்களை பாதுகாத்திட நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கண்டைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்திடும்.

    இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 3 லட்சம் மீன் விரலிகள். இவை 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேட்டூர் காவிரி ஆற்றில் 4 ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் இருப்புச் செய்யப்பட்டது. இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.70 லட்சமாகும்.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.கோபால், தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியம், மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்குகிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.5.10 கோடியில் திருப்பணிகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதற் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி யது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    கும்பாபிஷேக விழா

    நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர் நேரு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற கோட்டை மாரியம்மன் தங்க தேரோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்கு கிறது. அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் - செல்வி சார்பில் கோட்டை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் சாமி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.
    • அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு கொட்டச்சேடு, அயோத்தியாப்பட்டணம் வழியாக கீழே இறங்கினர். அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.

    • ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு மாதம் 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்காலிக தேர்வு

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதலாக ஒரு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்குவதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ெதாடங்கப்பட உள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் 13 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டம் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியிடம் குறித்த விவரங்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை அடுத்த மாதம் 8-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
    • நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    தாரமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு

    ராகி, கம்பு, சோளம் குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பயிரிடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதனை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    இதில் விவசாயிகள் சிறுதானிய உணவு வகை பயிர்களை நன்கு பராமரிக்க நுனி கிள்ளுதல், யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் கஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் கோபி, வேளாண் அலுவலர்கள் சதீஷ் பாபு. செல்வி, தில்லைக்கரசி, தொழில்நுட்ப மேலாளர் அகிலா மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அப்போது சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    பெட்ரோல், டீசலுக்கு ஒரே விலை

    இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுங்க கட்டண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் புதிய சுங்கச்சாவடிகள் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை மொத்த சுங்க கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சங்ககிரியில் லாரிகளுக்கு என தனியாக தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். லாரி தொழிலுக்கு என சங்ககிரியில் தனி நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிக்கும் பிரச்சனையிலிருந்து லாரி உரிமையாளர்களை காத்திட வேண்டும். லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் லாரி பார்க்கிங் அமைத்து கொடுத்தால் வாகனங்கள் சாலையோரம் நிற்காமலும், விபத்து ஏற்படாமலும் இருக்கும்.

    ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம்.
    • இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முறையாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் தொட்டில் கட்டி அவரை அழைத்து சென்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்த கிராம மக்கள் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தங்கள் கிராமத்தின் அவல நிலை குறித்து குமுறியுள்ளனர்.

    இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். கிராமத்தில் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படும் நேரங்களில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத காரணத்தால் தொட்டில் கட்டிதான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம். அப்போது அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்களித்தனர்.

    அதன்பின்பு இதுவரை யாரும் எங்களை பார்க்க வரவில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×