என் மலர்tooltip icon

    சேலம்

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது.
    • அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மோகன் சேலம் மநாகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது. இதில் தற்போது தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தை ஜெயராமன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்.

    இந்தநிலையில் அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர் உள்பட 20 பேர் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்போவதாக கூறி எனது விவசாய நிலத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதனை தடுத்து நிறுத்திய நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.

    அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனவே அத்து மீறி விவசாய விளை நிலத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.  

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
    • 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தாரமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் போலீசார் சோதனை செய்வதை அறிந்து அதன் உரிமையாளர்களான சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), லிங்கராஜ் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கண்ணனுக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவருக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கண்ணன் சிறுவாச்சூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் பழுது நீக்கும் ஊழியராக (வயர் மேன்) பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கண்ணன் வழக்கம்போல் நேற்று மாலை சிறுவாச்சூர் ராஜீவ் நகரில் உள்ள மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.

    வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
    • படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி 23 யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) அதிகாலை 4.30 முதல் 7.30 மணி வரை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

    8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேக விழாவினை காண்பதற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கும்பாபிஷேகத்தை எளிதாக காணும் வகையில் விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய டிஜிட்டல் திரையின் மூலம் காண கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு ஆதினங்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று நாளை (27-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 103 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விலை உயர்வு

    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 23-ந் தேதி விலை குறைந்த நிலையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இன்று விலை மீண்டும் அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல நேற்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று 400 ரூபாய்க்கும், ஜாதி மல்லிகை பூ நேற்று 260 விற்கப்பட்ட நிலையில் இன்று 280 ஆகவும் உயர்ந்தது.

    இதே போல காக்கட்டான் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரளிப்பூ 120 ரூபாயிலிருந்து 160 ஆகவும் உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.

    முகூர்த்த நாள்

    வருகிற நாட்களில் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இருப்பதாலும் இந்த பூக்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • மோலாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), பிரமிளா (19), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார்கள்.
    • சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக் காரனூர் மோலாண் டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காடச்ச நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (19), இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் பிரமிளாவின் பெற்றோருக்கு தெரியவர இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிரமிளா சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×