என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் நெமிலி ஆகிய ஒன்றியங்களுக்கு 2ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

    நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேலபுலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேலபுலம் புதூர், மோட்டூர், ராமாபுரம், நங்கமங்கலம், எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகளில் 6000 வாக்காளர்கள் உள்ளனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக 2 பெண் பேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலபுலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையத்தில் ஓட்டுபதிவு நடந்தது.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் ஒரு தரப்பு வேட்பாளரின் உறவினர் என கூறப்படுகிறது. அவர் அந்த வேட்பாளருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது.

    மேலும் முதியவர்கள், பெண்கள் வாக்காளர்கள் வாக்கு அளித்த வாக்கு சீட்டினை சரியாக மடிக்காமல் தலைகீழாக 2 சின்னங்களில் முத்திரை பதியும்படி வாக்கு சீட்டினை மடித்துள்ளார் என மற்றோரு வேட்பாளர் தரப்பினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இப்படி வாக்குசீட்டினை மடித்தால் அந்த வாக்கு செல்லாத வாக்கு ஆகும் என ஒரு தரப்பினர் வாக்கு அளிப்பதை நிறுத்தினர்.

    மேலும் ஓச்சேரி பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், அவளூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் மற்றொரு தரப்பு வேட்பாளர் மத்தியில் 6,8 வார்டுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் மறு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் வாக்கு பெட்டிகளை எடுத்து செல்ல விடாமல் மேலப்புலம் அரசு மேல்நிலைபள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    மேலும் விடிற்காலை 3மணியளவில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மறு வாக்கு பதிவு நடப்பதற்கு சாத்தியகூறு இல்லை.

    12-ந்தேதி வாக்கு எண்ணும் நாளான்று நீங்கள் சொல்லிய குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டால் சம்மந்தபட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, எதிர்தரப்பு வேட்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதிகாலையில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்றனர்

    இதையடுத்து அதிகாலை 4 மணியவில் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிகாலையில் வாக்கு பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா கூறுகையில், அனைத்துத்துறை அலுவலர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மழைக்காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துத் தாலுகாக்களிலும் மொத்தம் 1743 முதல் தகவல் அளிப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு குறித்துத் தகவல் அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இடர்பாடு காலங்களில் அவசர உதவிகளுக்கு 23 ஜெனரேட்டர், 12 தண்ணீர் இறைக்கும் மோட்டார் எந்திரம், 33 மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளன.

    தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்றிட 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், நீர்வள ஆதார செயற்பொறியாளர் ரமேஷ், அனைத்து கோட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் கட்டுப்பாட்டிலுள்ள பாலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு நெடுஞ்சாலை துறையின் குறுக்கே செல்லும் கால்வாயினை பார்வையிட்டனர். அதைப்போல் காவேரிப்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆற்காடு அருகே கால்வாயில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக் குண்டி கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் சின்னகுக் குண்டி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கால்வாயில் தவறிவிழுந்து அடித்துச் சென்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அக்டோபர் 4-ந் தேதியிலிருந்து 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    பாணாவரம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இதையொட்டி, அக்டோபர் 4-ந் தேதியிலிருந்து 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பாணாவரம்-நெமிலி சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 411 மது பாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க மொத்தமாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (வயது 70), பாணாவரம் நெமிலி ரோட்டை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்து, ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ஆற்காட்டில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீசார் மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்த சதீஷ் (வயது 42), மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த ரஷித்அகமத் (24) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ைகது செய்தனர்.
    வாலாஜா அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா திருவள்ளுவர் தெரு அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 42), கூலித் தொழிலாளி. இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் குப்புசாமி வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பைபாஸ் பகுதியில் ஆடுகளுக்கு தேவையான தழைகளை எடுத்துக் கொண்டு மொபட்டில் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வி.சி.மோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது ஆற்காட்டில் இருந்து வாலாஜாவிற்கு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக குப்புசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 21). இவர் நேற்று காரை கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், ஜான்பாலை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் மாமண்டூர் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஓச்சேரி எம்.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சீனிவாசனை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடைபயிற்சியின் போது நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தினமும் நடைபயிற்சி சென்று வருகிறார். வழக்கம்போல நேற்று காலையும் நடைபயிற்சி மேற்கொண்டார். ராணிப்பேட்டை நவல்பூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக அவர் சென்றார்.

    அப்போது அந்தப்பகுதியில், வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குவதை நேரில் கண்டார்.

    இப்பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் குப்பைகளை தெருவில் கொட்டாமல், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம்பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தினமும் வழங்கிவருவதை அறிந்த அவர் பொதுமக்களை பாராட்டினார்.

    மேலும் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை தரம்பிரித்து வாங்கி, அவற்றை வாகனங்களின் மூலம் எடுத்து சென்ற ராணிப்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுப்பிரமணி, இந்திராணி, கலா ஆகியோருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ‘செல்பி' எடுத்துக் கொண்டார்.

    இது பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அரக்கோணம் அருகே மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து டிராக்டரில் மண் எடுத்துச்சென்ற டிராக்டர் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்ஆவதம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 46) என்பதும், மண் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, சசிகுமாரை கைது செய்தனர்.
    திமிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் கூலி தொழிலாளி. இவரது மனைவி நவமணி (வயது 30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நவமணி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா இருக்கும் இடத்தை தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும் இப்போது 1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    100 நாள்வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார்.

    முக ஸ்டாலின்

    அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் இதுவரை 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

    போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


    ×