என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே கால்வாயில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
Byமாலை மலர்8 Oct 2021 10:24 AM GMT (Updated: 8 Oct 2021 10:24 AM GMT)
ஆற்காடு அருகே கால்வாயில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக் குண்டி கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் சின்னகுக் குண்டி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கால்வாயில் தவறிவிழுந்து அடித்துச் சென்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக் குண்டி கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் சின்னகுக் குண்டி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கால்வாயில் தவறிவிழுந்து அடித்துச் சென்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X