என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 47-ம் ஆண்டு பூச்சொரி தல் விழா நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பின்னர் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர்.

    பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ராமமுர்த்தி, தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், மாடசாமி, சேகர், கூடல்மற்றும் எஸ்.ஏ.பி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
    • அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிர குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர். அந்தந்த பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலர்கள் முறை யாக மின்கம்பத்தை பராமரிக்காததால் தற்போது பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.

    குறிப்பாக கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் கம்பத்தின் தலை பகுதியில் உள்ள சிமெண்டுகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

    இந்த மின்கம்பம் அருகே குழந்தைகள் விளையாடி வரு கின்றனர். அதுமட்டுமல்லாது அந்த மின்கம்பத்தை கடந்து முதியோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்கின்ற னர். அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வுகள் ஏற்பட்டு அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது. பல மாதங்க ளாகியும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் உடைந்து விழும், டிரான்ஸ்பார்மர்கள் எப்பொழுது வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. இதனை மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரங்களை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். பழுத டைந்த மின்கம்பங்களால் நகரில் பல பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படு வதற்குள் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அண்ணாமலையை நேரில் சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்ததாக போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு ேபாலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தி.மு.க. பேரூராட்சி தலைவர் மாரியப்பன். இவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்ததாக போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் போலி வீடியோவை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாயல்குடி போலீஸ் நிலையத்தில் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:- நான் பனைமர தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் பகுதி மக்களை சந்திக்க வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு ேபாலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் காமராஜ், அழகர் வேல் பாண்டியன், அமுதா, பானுமதி, சண்முகத்தாய் சுப்பிரமணியன், குமரையா ஆகியோர் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கி போனது.
    • கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் செயல்ப டுத்தப்பட்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் காணாமல் போய்விட்டது. வருங்காலங்களில் வறட்சியை சமாளிக்க மீண்டும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது,

    இயற்கை கொடுக்கும் மழைநீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி களை, திட்டமிட்டுச் செயல்ப டுத்த அரசு அறிவித்தும் அதிகாரிகள் முன் வராத காரணங்களால் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் ஆதாரங்களும் சரிவர அமையாததால், குடிநீருக்காக மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

    நாளடைவில் அதிகாரி கள் மழைநீர் சேகரிப்பு திட்டங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால், குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால், மழைநீரைச் சேமிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    எனவே, கிராமங்கள் தோறும் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும், மழைக் காலம் தொடங்கும் முன் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு பால், பழம், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், அரிசிமாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக பால், நெய்வேத்திய சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆலயம், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயம், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆலயம், ஓரியூர் சேயுமானவர் கெம், திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவாலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் வந்த 4 பேரையும் கைது செய்தனர்.
    • கடத்தலில் தொடர்புடைய நபர்கள் வேதாளை கிராமத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நாட்டுப்படகை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் படகில் சோதனையிட்டனர். இதில், படகில் சுமார் 10 கிலோ எடை தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர்களை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்கள் வேதாளை கிராமத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

    ஆர்.எஸ்.மங்கலம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    4-வது நாளான இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார். பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி மிகவும் புகழ்பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த தொகுதி கடந்த 37 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. தாத்தா, மகன், பேரன் என்று தொகுதியை பிடித்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்மாய் இங்குள்ள ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய். 42 மதகுகளை கொண்ட கண்மாயில் மதகுகள் சரியாக இல்லை.

    இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இன்று அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்கள். காரணம் இங்கு விவசாயம் செய்து பிழைப்பு நடத்தமுடியவில்லை. அதனை சரிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

    இங்குள்ளவர்கள் பனை மரம் வைத்திருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். காரணம் கள் இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் 5,500 உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு கடைகளை மூடினாலே பனைமரம் வைதிருப்பவர்களின் வாழ்வு வளமாகும். காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன்பின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார்.

    இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • பொதுமக்களின் வசதிக்காக புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி-எமனேஸ்வ ரத்தை இணைக்கும் வகை யில் மேம்பாலம் கட்டப்பட் டது. அந்த பாலம் வழியாக தான் பரமக்குடியிலிருந்து இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் கள், மாநிலங்களுக்கு தினந் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற னர்.

    இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது புதிய மேம்பால பணிகள் நடைபெறும் போது மக்கள் பயன்படுத்து வதற்காக புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப் பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீரில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து இரண்டாக உடைந்து மக்கள், பாலத்தை பயன் படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை யில் பகல், இரவு நேரங்களில் உடைந்த தரைப்பாலத்தில் நடந்து சென்று மது அருந்தி விட்டு வரும் போது உடைந்த பாலத்தில் போதை ஆசாமி கள் நிலை தடுமாறி விழுந்து இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி உடைந்த பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ஆற்றுப்பாலம் அருகே போடப்பட்ட தற்காலிக உடைந்த பாலத்தை முழுவது மாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் கட்டினால் நயினார்கோவில், இளை யான்குடி, எமனேஸ்வரம், வளையனேந்தல், முனை வென்றி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    அதே போல் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய விலை பொருட்களை தங்களது சைக்கிள், இருசக்கர வாக னம் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களில் தரைப்பாலம் வழியாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

    காலை, மாலை நேரங்க ளில் சைக்கிள், நடந்து மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆற்றுப்பாலம் அருகே புதிதாக தரைப் பாலம் அமைத்தால் வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க முடியும்.

    மாணவர்கள், விவசாயி கள் பொதுமக்கள் நலன் கருதி பழைய தரைப் பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய தலைப்பாலம் கட்டி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மன்னாா் வளைகுடா கடலில் 45 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
    • இதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி, பாம்பன், மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவா்கள் அதிகளவில் இறால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனா். மண்டபத்தை அடுத்த மரைக்காயா் பட்டணம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் பொறிக்க வைக்கப்பட்டு, கடலில் விடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று 45 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டு மன்னாா் வளைகுடா கடலில் விடப்பட்டன.

    இதற்கு கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலை வா் தமிழ்மணி தலைமை வகித்தாா். ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி, மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசு ராஜா, எமரிட், விஞ்ஞா னிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தார்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று 4-வது நாளாக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன்சுந்தர லிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் பிரசார வேனில் அண்ணாமலை சிறிது தூரம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகியும் எத்தனை பேருக்கு வேலைகிடைத்தது.

    தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு தாமரை மலரவே இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

    அப்போது அண்ணா மலை பொதுமக்களிடம் பிரதமர் மோடி ராமநாத புரத்தில் போட்டியிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் பிரசாரத்தை முடித்த அண்ணாமலை ராமநாதபுரத்திற்கு திரும்பி னார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    4-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகி களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார். இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன் பின் ஒன்றிய தலைவர் நர சிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார். இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செய லாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார், மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி.ரமேஷ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தூவல் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவடம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள அச்சங் குளம், அகத்தாரி ருப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரமற்ற கெட்டுபோன குளிர் பானங்கள், பழங் களை வெயிலை சாதகமாக பயன்படுத்தி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    அபிராமம் பகுதியில் கடைகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டிகளில் ஆரஞ்சு. ஆப்பிள், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இனிப்பிற்காகவும், சுவைக்காகவும் சாக்கிரின் பொடி மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகையான குளிர் பானங்களை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வாங்கி குடித்துவிட்டு சளி, இருமல், வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், சமுக ஆர்வலர்கள் கூறியாதவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் தரமற்ற குளிர்பானங்கள், பழ ஜூஸ்களை கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் கொடுமையை சமாளிக்க இதுபோன்ற தரமற்ற குளிர்பானங்களை குடிக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படு கின்றனர். எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

    • பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து கோவில் இணை ஆணையரை கண்டித்து ராமேசுவரம் பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட மக்கள் நல பாதுகாப்பு பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவில் இணை ஆணையர் தொடர்பான பிரச்சினையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவில் இணை ஆணையர் மாரியப்பனை மாற்றக்கோரி ராமேசுவரம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் நகரில் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். 

    ×