search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்
    X

    புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்

    • பொதுமக்களின் வசதிக்காக புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி-எமனேஸ்வ ரத்தை இணைக்கும் வகை யில் மேம்பாலம் கட்டப்பட் டது. அந்த பாலம் வழியாக தான் பரமக்குடியிலிருந்து இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் கள், மாநிலங்களுக்கு தினந் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற னர்.

    இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது புதிய மேம்பால பணிகள் நடைபெறும் போது மக்கள் பயன்படுத்து வதற்காக புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப் பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீரில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து இரண்டாக உடைந்து மக்கள், பாலத்தை பயன் படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை யில் பகல், இரவு நேரங்களில் உடைந்த தரைப்பாலத்தில் நடந்து சென்று மது அருந்தி விட்டு வரும் போது உடைந்த பாலத்தில் போதை ஆசாமி கள் நிலை தடுமாறி விழுந்து இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி உடைந்த பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ஆற்றுப்பாலம் அருகே போடப்பட்ட தற்காலிக உடைந்த பாலத்தை முழுவது மாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் கட்டினால் நயினார்கோவில், இளை யான்குடி, எமனேஸ்வரம், வளையனேந்தல், முனை வென்றி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    அதே போல் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய விலை பொருட்களை தங்களது சைக்கிள், இருசக்கர வாக னம் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களில் தரைப்பாலம் வழியாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

    காலை, மாலை நேரங்க ளில் சைக்கிள், நடந்து மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆற்றுப்பாலம் அருகே புதிதாக தரைப் பாலம் அமைத்தால் வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க முடியும்.

    மாணவர்கள், விவசாயி கள் பொதுமக்கள் நலன் கருதி பழைய தரைப் பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய தலைப்பாலம் கட்டி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×