என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அபிராமம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் மன உைளச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கவும், விற்கவும் செய்வதுடன் இந்த ஆவணங் களை பதிவு செய்ய அதிகமான பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு வருகின்றனர்.

    இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் இட நெருக்கடியும். அரசுக்கு பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்ப டுவதால் அவ்வப்போது சார்பதிவாளர் அலுவ லகத்தை மாற்றும் போது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    இந்த சிரமத்தை தவிர்க்கவும் அபிராமம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆபிராமம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சார்பதி வாளர் ராமமூர்த்தி கூறுகையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து நிரந்த ரமாக சார்பதிவாளர் அலுவ கத்திற்க்கு கட்டிடம் கட்டும் பணியை பொதுப்பணி துறை மேற்கொள்ள உள்ளனர் என்றார்.

    • சாயல்குடி அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்து பனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டுப் படகில் கரைவலை வைத்து மீன்களை பிடித்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனைக் கண்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேப்பமரத்துப்பனை கடற்கரையோரம் வலைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • ஏர்வாடி ஓட்டல்களில் தொடர்ந்து சுகாதார குறைபாடு ஏற்பட்டு வருகிறது.
    • நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலுக்காக வருகின்றனர்.

    அதிக மக்கள் வந்து செல்வதால் மற்ற கடைகளை விட சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிக ளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பிரி யாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா, என காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பிட்ட ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாக உள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

    ஏர்வாடி ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணை களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். சுகாதாரம் மிக மோசமாக உள்ளதை சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

    இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத உணவுகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு களை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளிமாவட்ட பக்தர்கள் இந்த ஒட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

    ஏர்வாடியில் செயல் படும் ஓட்டல்களில் சுகாதார குறைபாடு உள்ளதை அதிகாரிகள் கவனிக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த சப்ளைக்கு பதிலாக குறைந்த மின்னழுத்த சப்ளைகோரி ஆலை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து மின் விநியோகம் வழங்குவதற்கு கமுதக்குடி கிராமத்தில் மின்கம்பங்கள் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அதிகளவில் இருந்ததால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    • கிராமங்கள்தோறும் தி.மு.க.வின் சாதனைகளை பரப்ப வேண்டும் மாநில மாணவரணி தலைவர் பேசினார்.
    • இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராஜீவ்காந்தி. இவரை தி.மு.க. மாணவர் அணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவரை பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி, அச்சுந்தன் வயல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேர் போகி கிராமத்திற்கு வந்த இவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொதுபட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கக்கோரி இல்லம் தேடி கல்வித் திட்டம் போல பள்ளி, கல்லூரிகள்தோறும் திண்ணை பிரசாரத்தில் தி.மு.க. மாணவர் அணி ஈடுபடும். தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பரப்பு வோம். முதல்-அமைச்சரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கத்தை தயார்படுத்தி திராவிட இயக்கத்தின் சாதனைகளை கொண்டு செல்லுவோம். திராவிடம் இருந்ததால் என்னை போன்றவர்கள் சட்டக்கல்லூரி படித்து வக்கீலாக வர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு, மண்டபம் ஒன்றிய மத்திய செயலாளர் முத்துக்குமார், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார். மானாங்குடி பத்மநாதன், பெரியபட்டினம் மீரான், சேக். நாகூர்கனி, ஹரி கிருஷ்ணன், கணேசன், சம்பத்குமார், ராஜேஷ், முனியசாமி, விஜயராகவன், பாண்டி, விஜயராஜ், காளிமுத்து திருமுருகன், சக்திவேல், யாசர், அன்பரசன், பிரபா, சாலமன், கனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள டி.இரணியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் (வயது 22) இவர் டிப்ளமோ மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    முகநூல் பக்கத்தில் கோவா துறைமுகத்தில் கப்பலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வ தாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பவித்ரன் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.

    பிறகு தனது மின்னஞ்சல் முகவரியில் சென்ற பார்த்தபோது குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, பேடிஎம் மூலம் 2 தவணைகளில் ரூ.65 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு பவித்ரனை கோவாவிற்கு வரும்படி அழைத்தனர். அங்கு சென்று மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது, மேலும் சில காரணங்களை தெரிவித்து கூடுதலாக பணம் செலுத்தினால்தான் வேலை வழங்க முடியும் என்று கூறினர்.

    சந்தேமடைந்த பவித்ரன் அவர்களது பாஸ்போர்ட், ஆதாரை ஆய்வு செய்த போது அனைத்தும் போலியானது என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்புல்லாணியில் நடந்த கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.

    திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி போட்டியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

    திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவி கஜேந்திரமாலா ஒன்றிய கவுன்சிலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி தலைமை ஆசிரியர் (பொ) பிரேமா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், செந்தில் குமார் மற்றும் ஆசி ரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஏராள மானோர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்தார்.

    • கிராமங்களின் வீதி ஓரங்களில், நுழைவாயில்களிலும் காணப்படும் கற்களிலான ‘‘சுமைதாங்கி’’ கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது.
    • கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெறாமல் இறந்தால் வயிற்றில் இருந்த சுமையை இறக்கி வைக்க முடியாமல் போன அவர்களின் நினைவாக சுமைதாங்கி அமைக்கப்படும் வழக்கம்.

    அபிராமம்

    கிராமங்களின் வீதி ஓரங்களில், நுழை வாயில்களில் அரிதாகக் காணப்படும் கற்களிலான அமைப்பானது ''சுமைதாங்கி'' எனப்படுகிறது.

    முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் தற்போதுள்ளது போன்று வாகன வசதிகள் கிடையாது. மிகவும் எடை கொண்ட, பெரும் பொதிகளைச் சுமப்பதற்கு மாட்டு வண்டிகளை உப யோகித்திருப்பார்கள். அனைவரிடமும் மாட்டு வண்டி வசதியும் இருந்திருக்காது. அதனால் முற்காலத்தில் பல பேர் எடை கொண்ட பொதிகளைத் தலையிலும், தோளிலும் சுமக்க வேண்டிய கட்டாய இருந்துள்ளது.

    பொதிகளைச் சுமந்து நீண்ட தொலைவுக்கு கால்நடையாக செல்லும்போது, பொதிகளை அடிக்கடி இறக்கி வைத்து இளைப்பாற வேண்டி இருக்கும். தரையில் இறக்கி வைத்து திரும்பவும் பொதியைத் தலையிலும், தோளிலும் ஏற்றுவதென்பது சிரமமானது.

    அதை இலகுவாக்கவே வீதிகளில் இத்தகைய சுமை தாங்கிக் கற்களை முன்னோர்கள் அமைத்தனர். ஒரு நபரின் சராசரி உயரத்தைக்கணக்கில் வைத்து, பொதியை இறக்கி, ஏற்ற வசதியாக இந்த கற்கள் தகுந்த உயரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    பல இடங்களில் பொதி சுமப்பவர்களின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள், நீர்ச் சுனைகள், கால்நடைகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள் போன்றவற்றின் அருகில் சுமைதாங்கிகளை அமைத்துள்ளனர்.

    இதுகுறித்து ராமநாத புரம் மாவட்டம் அபிராமத்தை சேர்ந்த முதியவர் வழிவிட்டான் கூறியதாவது:-

    சில சுமைதாங்கிகளில் பெண்களின் பெயர்களும், தேதியும் பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெறாமல் இறந்தால் வயிற்றில் இருந்த சுமையை இறக்கி வைக்க முடியாமல் போன அவர்களின் நினைவாக சுமைதாங்கி அமைக்கப்படும் வழக்கம் ஆரம்பமானது என்று சொல்லப்படுகிறது.

    உண்மையிலேயே சுமைதாங்கிகளை முன்னோர்கள் இந்த காரணத்திற்காக அமைக்க தொடங்கினார்களா? அல்லது நீண்ட தூர கால்நடைப் பயணங்களில் பொதியை இறக்கி வைத்து, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சுமைதாங்கிகள், காலப் போக்கில் இறந்த கர்பிணிப் பெண்களுக்காக அமைக்கப்படும் ஒன்றாக மாறியதா? என்று தெரியவில்லை.

    எந்த காரணமானாலும் சுமைதாங்கி கற்களின் பயன்பாடானாது சுமை களை இறக்கி வைத்து சிறிது நேரம் இளைப்பாறுதல் என்ப தாகும். சுமைதாங்கிகளை அமைக்கும் வழக்கத்தின் பின்னணி எதுவாக இருந்தா லும், பல பேர் பயன் கொள்ளும் நோக்கமே கருத்தில் இருந்துள்ளது.

    பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி கூடக்கவலைப்படாத இந்த காலத்தில் எங்கிருந்தோ வரும் வழிப்போக்கர்களை, அவர்களின் சிரமங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் மனம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது பெருமை தரும் விசயமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைபொருட்கள் அல்ல, தண்ணீர் கேன்களில் கடத்தியது விவசாய உரம் என்று ராமநாதபுரம் கடலோர எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.
    • ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது 25 லிட்டர் கொண்ட 30 தண்ணீர் கேன்களில் வெள்ளை நிற பவுடர் 394 கிலோ இருந்தது தெரியவந்தது. அவை போதைப்பொருட்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இது தொடர்பாக காரில் வந்த கீழக்கரை சங்குழித்தெருவைச் சேர்ந்த சாப்ரஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் கேன்களில் இருப்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உர மூலப்பொருட்கள் எனவும், அதனை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனாலும் சந்தேகமடைந்த போலீசார் அந்த பவுடர்களை சோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் உர மூலப்பொருட்கள் என தெரியவந்தது.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் எஸ்.பி. சுந்தரவடிவு வெளி யிட்டுள்ள அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பவுடர்கள் போதைப்பொருட்கள் அல்ல, அவை இயற்கை உரங்கள். அதிக பணம் மதிப்புடைய இதனை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.

    இந்த செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் சாப்ரஸ் நவாஸ், ஜெயினுதீன் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் மண்டபம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
    • இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    கீழக்கரை

    மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

    இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்க ளை பெற்று அதனை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×