search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Grievance"

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்க ளை பெற்று அதனை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×