search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rented Building"

    • பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது
    • எம்.எல்.ஏ., தாசில்தார் இடத்தை பார்வையிட்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.

    சில வருடங்களுக்கு முன்பு புதிதாக தாலுகா அலுவலகம் கட்டிடங்கள் கட்டப்பட்டது. அப்போது அங்கிருந்து சார் பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டது.

    தற்போது வாடகை கட்டிடத்தில் தங்கம் நகர் பகுதியில் இயங்கி வருகிறது.

    குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குடியாத்தம் அடுத்த கள்ளூரில் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வுப்பணிகள் நேற்று நடைபெற்றது.

    இதனை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தாசில்தார் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடத்தை பார்வையிட்டனர்.

    துணை தாசில்தார் சுபிச்சந்தர், அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகாபரத், கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அபிராமம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் மன உைளச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கவும், விற்கவும் செய்வதுடன் இந்த ஆவணங் களை பதிவு செய்ய அதிகமான பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு வருகின்றனர்.

    இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் இட நெருக்கடியும். அரசுக்கு பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்ப டுவதால் அவ்வப்போது சார்பதிவாளர் அலுவ லகத்தை மாற்றும் போது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    இந்த சிரமத்தை தவிர்க்கவும் அபிராமம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆபிராமம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சார்பதி வாளர் ராமமூர்த்தி கூறுகையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து நிரந்த ரமாக சார்பதிவாளர் அலுவ கத்திற்க்கு கட்டிடம் கட்டும் பணியை பொதுப்பணி துறை மேற்கொள்ள உள்ளனர் என்றார்.

    ×