என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டையில் மணிப்பூர் சம்பவங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணமா னவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், கலவரத்தை தடுக்க தவறிய மாநில அரசு பதவி விலகக் கோரியும்நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் அன்புக்கரசி, சுதா,லெனின், ராமச்சந்திரன், கவிதா, சாந்தி, குமரேசன், ராஜேஷ். சி. ஐ டி.யூ மண்டல தலைவர் கார்த்திகேயன், ராமையன், சித்திரவேல், சலோமி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் தர்பூசணி தினம் கொண்டாடப்பட்டது
- மழலைக் குழந்தைகள் தர்பூசணி வேடமணிந்தும், கதர்பூசணி வடிவத்தோடுகள் சங்கிலிகள் அணிந்து வந்தனர்
புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தாகத்தை தீர்க்கும் தர்பூசணிப்பழதினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச தர்பூசரணி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படும் நாளில் பள்ளியில் எல்.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்து தர்பூசணிஜுஸ் மற்றும் தர்பூசணி பழக்கீற்றுகளையும் கொண்டுவந்தனர்.மழலைக் குழந்தைகள் பச்சை சிவப்பு வண்ணங்களில் தர்பூசணி வேடமணிந்தும், கழுத்து காதுகளில் தர்பூசணி வடிவத்தோடுகள் சங்கிலிகள் அணிந்து வந்தனர்.வகுப்பறைகளில் தர்பூசணிக்கீற்றுகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தர்பூசணிக் பழக்கீற்றுகளால் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், லாலிபாப், கேக்குகள், கூடைநிறைய கீற்றுகள் என குழந்தைகள் ஆசை ஆசையாய் வியந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. மழலைக் குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த தர்ப்பூசணிக்கீற்றுகளை பக்கத்து வகுப்பறைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.தர்பூசணி தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியின் மழலை மாணவர்கள் தர்பூசணிபழம் தொடர்பான பாடல்கள், செய்திகளைக் கூறும் நிகழ்வு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சி குறித்து பள்ளி முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி கூறும்போது,பொதுவாக தர்பூசணி பழம் வெயில் கொடுமையிலிருந்து நம்மைக்காக்கும் இயற்கை குளுக்கோஸ் ஆகும். இது உடல் சூட்டைத் தணிப்பதோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. சிறுநீரகக்கற்கள் உருவாவதைத் தடுக்கிற ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு வேறெங்கும் இல்லாத வகையில் எங்கள் பள்ளியில் மழலை மாணவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கிய உணவுப்பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இதுபோல பயனுள்ள தினங்களைக் கொண்டாடுகின்றோம். பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்தோடு குழந்தைகளைக் கொண்டாடும் நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றனர்.என்றுகூறினார். நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதி மற்றும் மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
- 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், புத்தக கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த நிலையில் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவிற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசுகையில், "புத்தக திருவிழாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. சிறைத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட அரங்குகளில் 3 ஆயிரம் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் பெற்ற கல்வி செல்வம் நம்மிடம் இருந்து குறையாது. இதேபோல அடுத்த ஆண்டு புத்தக திருவிழா இதனை விட பெரிதாக நடத்துவோம்'' என்றார்.விழாவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அலுவலர் கவிதா ராமு, திருநாவுக்கரசர் எம்.பி. நடிகர் தாமு , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் ரூ.68 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- எம்.எல்.ஏ. சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விராலிப்பட்டி ஊராட்சியில் அங்காடி அமைத்தல். குளத்தூர் ஊராட்சியில் அங்காடி அமைத்தல், நடுப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல், தச்சங்குறிச்சி ஊராட்சியில் தடுப்புச் சுவர் மற்றும் படித்துறை அமைத்தல், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல், கந்தர்வகோட்டை ஊராட்சியில் கலையரங்கம் கட்டுதல், மற்றும் துருசுப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் ,ஆணையர் பால் பிரான்சிஸ், திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மேன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆர்.எஸ். முத்துக்குமார், ஜோதி ராணி மகாலிங்கம், ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார், அரசு முதல் நிலை ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு கறம்பக்குடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
- ஆண்கள்,பெண்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் மற்றும் ஆண்கள் பெண்கள் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.முன்னதாக காலையில் நடைபெற்ற பெரிய மாடு கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை ஆகியவற்றின் பந்தயத்தை புதுக்கோட்டை இளைய மன்னரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான விஜய ரகுநாத கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கரிச்சான் மாடு கரிச்சான் குதிரை பந்தயம் 10 மையில் தூரம் சென்று திரும்பும் வகையில் நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மாடு குதிரை வண்டிகளை ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் கரிச்சான் ஒற்றை மாடு, நடு மாடு, பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. தொடர்ந்து ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. வயது வித்தியாசம் இன்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் 66 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை யடுத்து பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூபாய் 5 ஆயிரம் , ரூபாய் 4 ஆயிரம், ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளும் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலா விடுதி ஊராட்சி மன்ற தலைவர் விஜய ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் பண்ண வயல் ராஜா தம்பி, ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேன நாதன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.
- புதுக்கோட்டையில் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்
புதுக்கோட்டை,
விராலிமலை தாலுகா, பேராம்பூர் கிராமத்தில் குதிரைக்கார தங்கையா என்கிற அகோர வீரபத்திரர் சாமி மற்றும் வீர மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்நது வீர மகாலட்சுமி அம்மனுக்கு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அகோர வீரபத்திரர் மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து தை பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அப்போது வீரபத்திரர் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தார்.பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கருப்பர் கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புதுக்கோட்டையில் நரிக்குறவர் பழங்குடியினத்தவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது
- அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா, தையல் இயந்திரம், சாதி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அறிவொளிநகர் பகுதியினைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 42 பேருக்கு, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், 111 நபர்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்களையும அவர் வழங்கினார். மேலும் விழாவில் 5 நபர்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
- புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழாவில் 9ம் நாள் விழா
- அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை 6-வது புத்தகத்திருவிழா28ந்தேதி தொடங்கி நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் கலந்து கொண்டு, புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ,, முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கி வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் ஆடிமாத புரவி எடுப்பு விழா
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் உள்ள குன்னமுடைய அய்யனார், காளியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் குன்னமுடைய அய்யனார், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை மற்றும் காவடி எடுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை மற்றும் காளை எடுப்பு விழா நடைபெற்றது. சுள்ளணி கிராமத்திலிருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள் மற்றும் மதலை சிலைகளை 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் தங்கள் தோள்களிலும், தலையிலும் சுமந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். மழை வளம் வேண்டியும், உலக மக்கள் நலன் வேண்டியும் நடைபெற்ற விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புதுக்காட்டையில் கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையை பார்வையிட்ட அவர், அதன் பின்னர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு கீரை மற்றும் பழங்கள் வழங்கினார். இவ்விழாவில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.
- எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் (எ) சங்கர் (வயது 56) தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்.
தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி ஊராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சங்கர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இளங்குபட்டி அருகேயுள்ள மேல முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்பு க்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலை ஒட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.
சங்கர் நிலத்தை தர மறுத்தார். ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டு மானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.
இந்த பிரச்சனையால் கடந்த 12 ஆண்டுகளாக அய்யானார் கோவிலில் விழா நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அய்யானார் கோவில் அருகே உள்ளமுனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையுடன் நான் அங்கு வந்தேன். எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான், தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை வெட்டினேன். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றார்.
நான் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கார்த்திக் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்
- கோவில் திருவிழா தடைபட காரணமாக இருந்ததால் வெட்டி கொலை செய்ததாக வாலிபர் வாக்குமூலம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் (எ) சங்கர் (வயது 56) தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்.தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி ஊராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சங்கர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் இளங்குபட்டி அருகேயுள்ள மேல முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலை ஒட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.சங்கர் நிலத்தை தர மறுததார். ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.இந்த பிரச்சனையால் கடந்த 12 ஆண்டுகளாக அய்யானார் கோவிலில் விழா நடைபெறாமல் உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அய்யானார் கோவில் அருகே உள்ளமுனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போது மதுபோதையுடன் நான் அங்கு வந்தேன். எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த நான், தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை வெட்டினேன். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றார்.நான் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இத போலீசார் அவரை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில்,கார்த்திக் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






