என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
- எம்.எல்.ஏ., எஸ்.டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதே போன்று எல்என்புரம் நடுநிலைப்பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி நிறுத்தும் கூடத்தை திறந்து வைத்ததோடு, அதே பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகரச் செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.
- தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.
புதுக்கோட்டை:
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. 2 ஆண்டுகள் முழுமையாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் தாங்கள் உயிர் வாழும் காலம் வரை அதற்கு தேவையான ஆரோக்கிய அடிப்படையை தாய்ப்பால் வழங்குகிறது.
அதுமட்டுமல்லாமல் 40 வகையான புற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தாய்ப்பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு குறைந்த அளவு தாய்ப்பால் மட்டுமே சுரக்கிறது.
இந்த சூழலில் தாய்ப்பால் வங்கியில் இருக்கக்கூடிய தாய்ப்பாலை அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்தெடுக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது (வயது 39). தனியார் பஸ் டிரைவரான அவர் ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் சம்சாத் பேகம் (30) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணமான முதல் வருடத்தில் சம்சாத் கர்ப்பம் தரித்தார். அது குறுகிய காலத்தில் கலைந்து விட்டது.
அதன் பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெற்றார். அதன் விளைவாக மீண்டும் கடந்த ஆண்டு சம்சாத் பேகம் கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் ஒன்றரை கிலோ மட்டுமே அந்த குழந்தையின் எடை இருந்தது.
அதைத்தொடர்ந்து அக்குழந்தையை அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆரம்பத்தில் அந்த குழந்தை தாய்ப்பால் எடுத்து கொள்ளவில்லை. பின்னர் படிப்படியாக ஒரு மில்லி 2 மில்லி அளவுக்கு தாய்ப்பால் அருந்த தொடங்கியது.
இவ்வாறான சூழலில் சம்பத் பேகம் தனது குழந்தையின் தேவைக்கு தாய்ப்பாலை கொடுத்து விட்டு மீதமுள்ள தாய்ப்பாலினை அங்குள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கி வந்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் அவர் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சம்சாத் பேகத்துக்கு டீன் ராஜ்மோகன் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து நியோ நாட்டலஜி துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கூறும் போது,
இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு தாயிடம் அதிகபட்சமாக 14 லிட்டர் தாய்ப்பால் மட்டுமே தானமாக பெறப்பட்டது. இப்போது முதல் முறையாக சம்சாத் பேகம் ஒன்றரை மாதத்தில் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.
இது மற்றவர்களும் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்றார்.
சம்சாத்தின் கணவர் பீர் முகமது கூறும்போது,
திருமணமான முதல் ஆண்டிலேயே குழந்தையை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று கடைசியில் குழந்தை பிறந்தது.
ஆனால் குறை பிரசவமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு ராணி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். சிகிச்சைக்கு பின் கடந்த சனிக்கிழமை குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். இப்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றார்.
சம்சாத் கூறும்போது, நான் என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது தாய்ப்பால் குறைவாக இருந்த பல தாய்மார்கள் மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு செல்வதை பார்த்தேன். இதனால் தாய்ப்பால் தானமாக வழங்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.
- புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார அரசு மருத்துவமனை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.
புறநோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கழிப்பறை மற்றும் பிற உபயோகத்துக்கு தனியாக ஒரு சின்டெக்ஸ் தொட்டியும், குடிநீருக்கு வேறொரு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் நேற்று மருத்துவமனை ஊழியர்கள் குழாயில் தண்ணீரை பிடித்து முகம் கழுவியபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தனர்.
பின்னர் அங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டிட மாடியில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் பார்த்தபோது அதில் 2 குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டனர்.
பின்னர் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் அந்த 2 குரங்குகள் உடல்களையும் மீட்டு மருத்துவமனை பகுதியில் அடக்கம் செய்தனர்.
அதன் பின்னர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு கிருமிநாசினி தெளித்து தொட்டியை சுத்தம் செய்தனர்.
குடிநீருக்கு தனியாக வேறு ஒரு தொட்டி பயன்படுத்தப்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருக்கும் பொதுமக்கள் கூறும்போது,
விராலிமலை பகுதியில் அதிக அளவு குரங்குகள் மற்றும் மயில்களின் நடமாட்டம் உள்ளது. இருப்பினும் தொட்டியை சரியாக மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் தண்ணீர் தேடி வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து ஏற முடியாமல் இறந்துள்ளது.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதுவே குடிநீர் தொட்டியாக இருந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும். இந்த தண்ணீரில் குளித்து பயன்படுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பழைய தண்ணீர் தொட்டியை முற்றிலுமாக அகற்றி விட்டு நல்ல முறையில் மூடி இருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்றனர்.
- வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நகராட்சியில் நிலுவை வரிகளை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் முறையாக வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைத்து வருகின்றனர். மேலும் நிலுவை வரிகளை வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- கைதிகளுக்காக புத்தகங்கள் பார்வையற்ற மாணவ-மாணவிகள் வழங்கினர்
- ரூ.4 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் `கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கு சிறைத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காக புத்தகங்களை பரிசாக பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறை கைதிகளுக்காக பொதுமக்கள் பலர் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பள்ளி சார்பில் பணத்துடன் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி, அதனை கைதிகளுக்காக பரிசாக சிறைத்துறை அரங்கில் வழங்கினர். இதில் ரூ.4 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் வழங்கப்பட்டதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர்.
- ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரபாண்டியன் (வயது 27). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அறந்தாங்கியில் 23 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு
- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 15 லட்சம் மதிப்பிலான கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதே போன்று எல்என்புரம் நடுநிலைப்பள்ளியில் 4 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி நிறுத்தும் கூடத்தை திறந்தும், அதே பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகரச் செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- இலுப்பூரில் புதிய கூட்டுறவு கடலை ஆயில் மில் திறக்கப்பட்டது
- முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூரில் செயல்பட்டு வரும் இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பன்முக சேவை திட்டத்தின் கீழ், கூட்டுறவு கடலை ஆயில் மில் கட்டப்பட்டது.
அந்த புதிய கடலை ஆயில் மில்லினை முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மேலும் இலுப்பூர் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டப்பட்டு புதிய பன்னோக்கு கூட்டுறவு சங்க வளாகம் கட்டுமான பணியினையும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார், பின்னர் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறித்தினார்.
தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் நியாயவிலைக் கடை உள்ளே சென்று அரிசியின் தரம் மற்றும் எடை அளவு உள்ளிட்டவரை ஆய்வு செய்தார், கைரேகை வைக்கும் மிஷின் சரியான முறையில் செயல்படுகிறதா இல்லையா என்று நியாயவிலைக் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.
- விராலிமலை இழுப்பூரில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்
- மர்ம நபர்கள் கட்டை, கல்லால் அடித்து வெறிச்செயல்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி க்கு உட்பட்ட திருவண்ணா கோயில்ப ட்டியை சேர்ந்த வர் கணேசன்(வயது 59).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணா கோயில்பட்டிக்கு வந்தார்.பின்னர் அவர் சென்னை க்கு செல்லவில்லை. மனை வி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கணேசன் திருவண்ணா கோயில் பட்டியில் கோயில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பி ட்டு வந்தார். இன்று (வியா ழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அம ர்ந்திருந்தார்.அப்போது வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்ற னர்.காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனை க்காக அனுப்பி வைத்தனர்.கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
- கண்மாய் வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது
- ஆவுடையார்கோவில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் கோதைமங்களம் கிராமம் உள்ளது.புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலும், சிவகங்கை மாவட்ட எல்லை ஓரத்திலும் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்களம் கண்மாயின் வரத்து வாரி பகுதியில் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் கண்ணேரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் வாரியை அடைத்து விவசாயப் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோதைமங்களம் கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து நீர் தடுக்கப்பட்டு, விவசாயம் பொய்க்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் கடும் வறட்சியை சந்தித்த மக்கள் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் மார்டின்லூதர்கிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
- புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்
- அறந்தாங்கியில் நடந்த பாதயாத்திரையில் அண்ணாமலை உறுதி
அறந்தாங்கி,
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அறந்தாங்கி நகர் பகுதியை வந்தடைந்தார். திருமயத்தில் இருந்து வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் ரோஜா பூ மாலை அணிவித்து பூர்ண குடும்ப மரியாதை செலுத்தி உற்சாகமாக வரவேற்றனர் அப்போது அவர் செல்வமகள் திட்டத்தின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நகரின் பாஜக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பெற்றோர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தினார் அப்போது கூட்ட நெரிசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு அவர் கூறினார். பின்பு செக்போஸ்டில் இருந்து தொடங்கிய நடை பயணத்தை நகரின் முக்கிய விதிகளான வாகை மரம் பெரிய கடை வீதி கட்டுமாவடி முக்கம் காமராஜர் சிலை பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடை பயணம் முடிவுற்றது. அறந்தாங்கியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது என்றும், புதுக்கோட்டை மாவட்ட பாராளுமன்ற தொகுதியை கண்டிப்பாக மீட்டெடுக்கப்படும் என்று அவர் பேசினார். முன்னதாக அறந்தாங்கி செக் போஸ்ட் அருகே மாலை 4 மணி முதல் பெண்கள் மற்றும் செல்வமகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது .இதனிடையே அறந்தாங்கி நகர் பகுதிக்குள் வரும் பேருந்துகள் சுமார் 3-மணி நேரத்திற்கு மேலாக மாற்று பாதைகளில் அனுப்பபட்ட நிலையில் நிலையில் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிகிச்சை தவித்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- செம்பூதி குன்னத்திக்காட்டு அய்யனார் கோவிலில் ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா
- 2 கிமீ தொலைவிற்கு மண் குதிரை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்த ஊர் மக்கள்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியில் அமைந்துள்ளது குன்னத்திக்காட்டு அய்யனார், நல்ல அய்யனார், வீரமலை அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களை உள்ளடக்கியதாக கோயிலாகும். இக்கோயில் ஆண்டுதோறும் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்வாண்டும் கடந்த ஆனி மாதம் பிடி மண் கொடுக்கப்பட்டு குதிரைகள் மதிலை சிலைகள்செய்யப்பட்டு ஊர் மந்தையில் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஊரின் எல்லைப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தோளில் சுமந்தவாறு எடுத்துச்சென்று அங்கு வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இவ்வாறு செய்வதன் மூலமாக மழை பெய்யும், விவசாயம் சிறப்பாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் பெருகும், ஊர் ஒற்றுமை பெருகும் என்பதனை ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக தொன்று தொட்டு இந்த வழிபாட்டு முறையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீசார் ஈடுபட்டிருந்தனர் செய்யப்பட்டு நடைபெற்றது.






