என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- கந்தர்வகோட்டையில் மணிப்பூர் சம்பவங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணமா னவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், கலவரத்தை தடுக்க தவறிய மாநில அரசு பதவி விலகக் கோரியும்நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் அன்புக்கரசி, சுதா,லெனின், ராமச்சந்திரன், கவிதா, சாந்தி, குமரேசன், ராஜேஷ். சி. ஐ டி.யூ மண்டல தலைவர் கார்த்திகேயன், ராமையன், சித்திரவேல், சலோமி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






