என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
    • ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி,

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஊராட்களிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.மேலப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பதிலளித்தனர். இறுதியாக கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைபிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு, புதுக்கோட்டையில் இருந்து 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது
    • விராலிமலையில் நடந்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது

    மதுரையில் 20 அன்று நடைபெற இருக்கும் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் விராலிமலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது . அதிமுக  பொன்விழா ஆண்டை முன்னிட்டு  நடைபெறும்  மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் விராலிமலை உள்ள அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றதுஇந்த ஆலோசனை கூட்டத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளைக் அதிமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மதுரை மாநாட்டில் விராலிமலை சட்டமன்ற தொகுதி சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமேலும் மாநாட்டிற்கு செல்ல வாகனம், உணவு இருப்பிடம் போன்றவை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதுபின்னர் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர்களை வாகனகளில் ஒட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராமசாமி மற்றும் ஒன்றிய நகர கழக செயலாளர் சார்பு அணி நிர்வாகிககள் உள்ளிட்ட 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • ஓடும் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை
    • திருச்சி பேராசியர் கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.இந்த ெரயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ெரயில் நிலையத்தை வந்தடைந்தது.அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ெரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.உடனே கோட்டை ெரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும்,இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ெரயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ெரயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுக்கோட்டை காந்தி பூங்கா முன்பாக போராட்டம் நடைபெற்றது
    • காந்தி பூங்காவில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நகராட்சி காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை நிா்வகிப்பது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் உணவு திண்பண்ட கடைகளும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காந்திபூங்காவில் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு காந்தி பேரவை மூலம் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காந்தி பூங்காவை மீட்க கோரி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், நிறுவனர் தினகரன் தலைமையில் திரண்டு பூங்காவை முற்றுகையிட்டனர். மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கந்தர்வகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ., சின்னத்துரை தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் ஆணையர் பால் பிரான்சிஸ் 'ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் துணைத் தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள். ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், சிறப்பு பற்றாளர் துணை ஆணையர் பார்த்திபன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பழைய கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், காட்டு நாவல் கிராம சபை கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன் தலைமையிலும், அரவம்பட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும் ,அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமை யிலும், பல்ல வராயன்பட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் கவிதாமணிகண்டன் தலைமை யிலும்,வி ராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர். எஸ். முத்துக்குமார் தலைமை யிலும் நடைபெற்ற து.

    • ஆலங்குடி அருகே கள்ள துப்பாக்கி விற்பனை செய்த உத்தரப்பிரதேச இளைஞர்
    • பெண்மீது தாக்குதல் தொடுக்க விற்பனை செய்த இளைஞர் கைது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர்கள் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர்.கவிதாவின் அக்கா கணவர் பாலசேகர் (50).இவர் திருச்சி ஏர்போர்ட் அவனியா நகரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே கவிதா தனது அக்கா கணவரிடம் பணம் கடனாக பெற்றார். அதனை திருப்பி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பாலசேகர் கடந்த 9-ம் தேதி கருக்கா குறிச்சி தெற்கு தெருவுக்கு அடியாட்களுடன் சென்று கவிதாவின் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் தொடுத்தார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கவிதா காயம் இன்றி தப்பினார்.இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசேகரை கைது செய்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை கைப்பற்றினர்.அதன் பின்னர் அந்த கள்ள துப்பாக்கி தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் புலன் விசாரணை நடத்தினார். அதில் பால சேகருக்கு உத்தர பிரதேச மாநிலம் பாந்தாம் மாவட்டம் திருப்பாதி சதா கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் குமார் (34 )என்பவர் துப்பாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.இதை யடுத்து கும்பகோணத்தில் தற்போது வசித்து வந்த நித்திஷ் குமாரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேர் மாயம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் ஆன ஒருமாவழக்தத்தில் ஒரு பெண் உட்பட மூன்று இளம்பெண்கள் மாயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே சங்கீரபட்டியை சேர்ந்தவர் சரவணன்(33). இவருக்கும் கலைவாணி(19) என்பவருக்கும் ஒரு மாதத்திற்கும் முன்பாக திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர் கடந்த 10ம் தேதி மதியம் முதல் காணவில்லை. இந்நிலையில் சரவணன் கொடுத்த புகாரின்போpல் இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா;.இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் அபிராமி(17). இவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரை கடந்த 14ம் தேதி இரவு முதல் காணவில்லை. முத்துசாமி கொடுத்த புகாரின்போpல் மழையூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அரிமளத்தில் கத்தகுறிச்சியன் தெருவை சேர்ந்தவர் பாலையா மனைவி சத்தியா(50). இவரது மகள் முருகேஸ்வாp(24) இவர் கத்தக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு 14ம் தேதி வந்தவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்தியா கொடுத்தப்புகாரின் பேரில் அரிமளம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • மணமேல்குடி கோடியக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடைபெற்றது
    • 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்

    அறந்தாங்கி,

    அமாவாசை தினம் என்பது சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் தினமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆண்டில் வருகிகிற ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை முக்கியமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தன்று பித்ருலோகத்திலிருந்து முன்னோர்கள் தங்கள் சந்ததிகளை பார்க்க புறப்படுவதாகவும், புரட்டாசி அமாவாசையன்று பூமியை வந்தடைவதாகவும் பின்பு தை அமாவாசையன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு சென்று விடுவதாகவும் ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மணமேல்குடி கோடியக்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் கடலில் நீராடி தங்களது முன்னோர்களை வேண்டி எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்பணம் செய்தனர். நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொன்னமராவதி அம்மன்குறிச்சியில் ஜல்லிகட்டு காளை கிணற்றில் தவறி விழுந்தது
    • தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்

    புதுக்கோட்டை,

    பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் சின்னு. இவரது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி காளையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    • .ராசியமங்களம் பகுதியில் நேற்று பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்தது
    • அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்களம் பகுதியில் திடீர் கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி-சித்ரா ஆகியோரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    • கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • கண்டியாநத்தம், கேசராபட்டி,க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது

    பொன்னமராவதி

    பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசிய கொடிவிழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்று சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்றுகண்டியாநத்தம், கேசராபட்டி, க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் சுதந்திர தின தேசியகொடியேந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சித்தலைவர்செல்வி, தலைமையாசிரியர்கள் சுபத்ராரூப வ்ஜெயஜோதி, மணிமேகலை,ஊராட்சிசெயலாளர்அழகப்பன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி கீதா மற்றும் பள்ளிமாணவ மாணவிகள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
    • பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்பு

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஐ.ஓ.பி மண்டல மேலாளர் சுந்தர கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×