என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சாத்தி விடத்திரான்வயலை சேர்ந்த விக்ரமன் (வயது 32) லாட்டரி சீட்டுகளை விற்ற போது அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1,500, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானபிரகாசம் அப்பகுதியில் சென்ற போது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரி தாக்கியதோடு, அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஞானபிரகாசம் சம்பட்டிவிடுதி போலீசில் புகார் செய்தார். புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து இருந்தார்.
வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று ஞானபிரகாசம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்சனையில் ஞானபிரகாசம் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் இச்சடி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.ஏ.ஓ. அம்பிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா, கந்தர்வக்கோட்டை தாலுகா கோமாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானபிரகாசம் அப்பகுதியில் சென்ற போது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரி தாக்கியதோடு, அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஞானபிரகாசம் சம்பட்டிவிடுதி போலீசில் புகார் செய்தார். புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து இருந்தார்.
வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று ஞானபிரகாசம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்சனையில் ஞானபிரகாசம் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் இச்சடி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.ஏ.ஓ. அம்பிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா, கந்தர்வக்கோட்டை தாலுகா கோமாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பிறப்பித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.
இத்திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்போவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் திட்டப்பணிக்காக புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்க வேண்டுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதுடன், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மதயானைப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
அதன்பலனாக தற்போது அந்த திட்டம் நிறைவேற போகிறது. இதையடுத்து முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.300 கோடி நிதியை ஒதுக்கினார். அதன் மூலம் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலங்கள் கையப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் வறட்சியான மாவட்டமாக இருந்த புதுக்கோட்டை பசுமையான மாவட்டமாக மாறும். 100 ஆண்டு கால கனவுத்திட்டம் தற்போது நிறைவேற உள்ளது. இதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து புதுக்கோட்டை மற்றும் 7 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.
இத்திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்போவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் திட்டப்பணிக்காக புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்க வேண்டுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதுடன், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மதயானைப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
அதன்பலனாக தற்போது அந்த திட்டம் நிறைவேற போகிறது. இதையடுத்து முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.300 கோடி நிதியை ஒதுக்கினார். அதன் மூலம் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலங்கள் கையப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் வறட்சியான மாவட்டமாக இருந்த புதுக்கோட்டை பசுமையான மாவட்டமாக மாறும். 100 ஆண்டு கால கனவுத்திட்டம் தற்போது நிறைவேற உள்ளது. இதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து புதுக்கோட்டை மற்றும் 7 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இறந்த மாமியார் உடலை வீட்டிற்குள் வைக்க மருமகள் மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 65). இவரது மகன் இறந்ததால் மீனாம்பாளின் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்தார். லதாவுக்கும், மீனாம்பாளுக்கும் மனக்கசப்பு இருந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் மீனாம்பாள் அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மீனாம்பாளின் உடலை ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
வீட்டிற்கு கொண்டு வந்தபோது, உடலை வீட்டிற்குள் லதா அனுமதிக்க மறுத்தார். இதனால் பக்கத்து வீட்டினர் சம்மதத்தின் பேரில் அங்கு வைத்து இறுதி சடங்கு நடந்தது.
பின்னர் மீனாம்பாளின் உடலை எடுத்து சென்று இளஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 65). இவரது மகன் இறந்ததால் மீனாம்பாளின் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்தார். லதாவுக்கும், மீனாம்பாளுக்கும் மனக்கசப்பு இருந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் மீனாம்பாள் அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மீனாம்பாளின் உடலை ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
வீட்டிற்கு கொண்டு வந்தபோது, உடலை வீட்டிற்குள் லதா அனுமதிக்க மறுத்தார். இதனால் பக்கத்து வீட்டினர் சம்மதத்தின் பேரில் அங்கு வைத்து இறுதி சடங்கு நடந்தது.
பின்னர் மீனாம்பாளின் உடலை எடுத்து சென்று இளஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்தனர்.
ஆவுடையார்கோவில் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் தாலுகா, சாட்டியக்குடி ஊராட்சி நரிக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் 3 மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் அப்பகுதியில் சுற்றுத்திரிந்துள்ளார். இந்நிலையில் ஆவுடையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை ஜன்னல் கம்பியில் ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் என்று புதுக்கோட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து தி.மு.க.விற்காக உழைத்தார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடக்க தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக காணொலிக்காட்சி மூலம் சுமார் 150 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தேன்.
இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்ன முடிவு வரும் என்று அனைவரும் அறிந்ததே. நாம் தான் ஆட்சியை பிடிப்போம். அதற்கு ஏற்றார்போல் விடியலை நோக்கி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பிரசார பயணத்திற்கு வியூகங்ககளை அமைத்து 234 தொகுதிகளுக்கும் சென்று மக்கள் குறைகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 34 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளோம்.
இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியுடன் 37 தொகுதிகளுக்கு சென்று வந்துவிட்டேன்.
இதுவரை இரு கட்டமாக 71 தொகுதிகளில் முடித்துள்ளோம். முன்பு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து வந்தேன். ஆனால் தற்போது நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அவர் எப்படி முதல்-அமைச்சரானார் என்று பேசினால் அவருக்கு கோபம் வந்துவிடும். தவழ்ந்து வந்தது என்பது உண்மையா இல்லையா? தவழ்ந்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வந்ததா இல்லையா? அவர் இல்லை என்றால் நான் இதனை வாபஸ் வாங்குகிறேன்.
இதோ பெங்களூருவில் இருந்து வந்தாச்சு, அ.தி.மு.க. கொடியுடன் சசிகலா வந்துகொண்டு இருக்கிறார். வந்தவுடன் என்ன நடக்கப் போகுது என்று தெரியவில்லை, ஆனால் நடக்க வேண்டியது நடக்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. வீட்டில் விளக்காகவும், நாட்டில் தொண்டர்களாகவும் மணக்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார்.
கீரனூர், மாத்தூர் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கீரனூர்:
கீரனூர் உபகோட்டத்திற்கு உட்பட்ட குளத்தூர் (அம்மாசத்திரம்) துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கீரனூர், குளத்தூர், இளையாவயல், பிரகதாம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என கீரனூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, நால்ரோடு, செங்களாக்குடி, குண்டூர், பர்மாகாலனி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்னையூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் எதிரே கணேசன் மற்றும் சரவணன் ஆகியோர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பக்கத்து கடைக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதியினர், பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கும், மின் வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான வைரமுத்துவின் மகன் குமாரசாமி மற்றும் திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட கணேசன் மற்றும் சரவணன் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினர்.
புதுக்கோட்டை அருகே கோரிக்கைகளை வலியுறித்தி அரசு ஊழியர்கள் 6-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும், அரசுத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், அரசுத்துறையில் பணியாற்றிவரும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 6-வது நாளான நேற்று மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் தலைமையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிகளில் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
நாளை (திங்கட்கிழமை) 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி உயர்நிலை மற்றும் மேல்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசியதாவது:-
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமூக இடைவெளியை பின்பற்ற போதிய வகுப்பு அறைகளும், ஆசிரியர்களும் இருப்பின் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை முழுவேளையாக பள்ளி இயங்கும்.
சமூக இடைவெளியைப் பின்பற்றும் போது மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சில வகுப்பறைகள் மட்டும் தேவைப்படும். அப்போது, பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்றவைகளை பயன்படுத்தி 9 முதல் 12-ம் வகுப்பு வரை முழு வேளையாக பள்ளிகள் செயல்படும்.
சமூக இடைவெளியை பின்பற்றும் போது சில பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்குமானால் மாணவர்களை பெரிய வகுப்பறை, கூட்ட அரங்கம் போன்ற இடங்களில் அமரவைத்து வகுப்புகளை நடத்தலாம். சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகளின் எண்ணிக்கை சமூக இடைவெளியை பின்பற்றுவதால் இருமடங்கு ஆகும் போது சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செயல்படலாம்.
பள்ளிகளில் சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் 2 வேளையும் செயல்படலாம். அவ்வாறு செயல்படும்போது காலை வகுப்புகள் முடிந்தவுடன் முறையாக கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மதியம் வகுப்புகள் தொடங்க வேண்டும்.
9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு சம்பந்தமாக அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். வகுப்பறை முன்பு சோப்பு நீர் வைக்கப்பட வேண்டும்.
9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷிப்ட் முறை பயன்படுத்தக் கூடாது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கணினி ஆய்வகம் மூலம் (ஹைடெக் லேப்) கற்றல் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் ஹைடெக் ஆய்வகம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கான சோதனை தேர்வினை 100 சதவீதம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ராஜேந்திரன், அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வம், இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) ஜீவானந்தம், கபிலன் (உயர்நிலை) மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அன்னவாசல் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டி பகுதியில் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லெக்கணாப்பட்டி பகுதியில் உள்ள பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 46) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே நம்பர் எழுதிக் கொண்டிருந்த குளமங்கலம் தங்கவேல் மகன் தமிழ்செல்வனை தனிப்படை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.






