என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆவுடையார்கோவில் அருகே முதியவர் தற்கொலை

    ஆவுடையார்கோவில் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் தாலுகா, சாட்டியக்குடி ஊராட்சி நரிக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் 3 மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் அப்பகுதியில் சுற்றுத்திரிந்துள்ளார். இந்நிலையில் ஆவுடையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை ஜன்னல் கம்பியில் ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×