என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஸ்ரீராஜகுமார் குருஜி 3-ம் ஆண்டு குரு பூஜை விழா நாளை தொடங்குகிறது
    • எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் மணிமண்டப திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஆகிய விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் அதிஷ்டான மணி மண்டப திறப்பு விழா கும்பாபிஷேகம் மற்றும் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா நாளை (30ந்தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் தொடங்குகிறது. அன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் துவங்கி எளம்பலூர் பிரம்மரி ஷிமலையாடிவாரத்தில் உள்ள காகன்னைஈஸ்வர் கோயிலில் முடிவடைகிறது. ஊர்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர்முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கிறது.தொடர்ந்து 31ம்தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 1ம்தேதி காலை 10 மணியளவில் மணி மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும் வழங்கப்படுகிறது.ஒசூர் ஸ்ரீவேலனடிமை சுவாமிகள் குருபூஜையை நடத்தி வைக்கிறார். 3 நாட்கள் முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள், அருளாசிகள் நடைபெறுகிறது. இதில் வேலூர் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள், ஆதினம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பராமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ளது போல் பூலாம்பாடியில் பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் டத்தோ பிரகதீஸ்குமார் அவரது சொந்த செலவில் செய்து தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை கோயம்பேட்டிற்கு அனுப்புவதற்கும் திட்டம் இருப்பதாககூறியிருந்தார்.இந்த நிலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் முன்பு டத்தோ பிரகதீஸ்கு மார்தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது , காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற்றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர். ஒரு விவசாயி ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும்.அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் என் சொந்த செலவில் அனுப்பப்படும் என அவர் என தெரிவித்து அதற்கு விவசாயிகள் இப்பொழுதே தயாராகும்படி கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் உடும்பியம் பெரியம்மாபாளையம் அரும்பாவூர் மலையாள பட்டி தழுதாழை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் அருகே வாலிபர் திடீர் சாவு உறவினர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்
    • மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்ட புரம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 37). திருமணம் ஆகாத இவர், மது பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.

    இந்நிலையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வெள்ளையன் மது வாங்கி கொண்டு அங்குள்ள பாரில் உட்கார்ந்து மது குடித்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்து மேஜையில் சாய்ந்தார். நீண்ட நேரமாக அவர் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்ததால், பக்கதில் மது அருந்தியவர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இருக்கையிலேயே வெள்ளையன் இறந்து போனது தெரியவந்தது. இைத தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பார் மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதற்கிடையே வெள்ளையன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள், டாஸ்மாக் மற்றும் பாரை அகற்றக்கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்த நேரம் தஞ்சையில் அரசு நிகழ்ச்சியை முடித்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்ல காரில் வந்து கொண்டிருந்தார்.

    மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மறியல் போராட்டம் முடிவுக்க வந்த சில நிமிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியை கடந்து சென்றார்.

    பின்னர் போலீசார் வெள்ளையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் பாரில் மது அருந்தியவர் இருக்கையிலேயே இறந்த சம்பவம் அங்கிருந்த மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை முகாம் நடைபெற்றது
    • முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்து

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் துணை தேர்வு எழுதாத மாணவர்கள் உயர் கல்வி, ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பில் சேர்தலுக்கான சேர்க்கை முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லது தலைமையாசிரியர்களால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் முகாமிற்கு வரவழைக்கப்பட்டு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. நேற்று நடந்த முகாமில் வாலிகண்டபுரம், கீழப்புலியூர், எளம்பலூர், சிறுவாச்சூர், பூலாம்பட்டி, பாடாலூர், ஈச்சம்பட்டி, கூத்தூர் ஆகிய பள்ளியில் பயின்ற 11 மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற படிப்புகளில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டது. முகாமில் அந்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுரைகள் வழங்கி சேர்க்கை சான்றிதழ் வழங்கினர். இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் வந்து உயர் கல்வி பயில நேரடி சேர்க்கை பெறலாம். இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகள் சார்ந்த வழிகாட்டலை வழங்கினர்.

    • பெரம்பலூரில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    பெரம்பலூர்,

    ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சூரக்குழி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 19), ராஜகுரு (19), சந்திரன் (24), ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வீரமாகாளியம்மன் கோவில் 2-நாள் தேரோட்டவிழா நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஆடித்திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மூக்குடி கிராம மக்களால் கண்டெடு க்கப்பட்டு, அறந்தாங்கியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலைக்கு சொந்தமான ஆலயத்தில் 29 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 18ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டக ப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தே ரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தினை ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலை யத்துறையினர், கிராம மக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் தொட்டு இழுத்தனர். திருத்தேரில் அமர்ந்து அருள் பாலித்து வந்த ஸ்ரீ வீரமாகாளியம்மனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற திருத்தே ரோட்டத்தில் முதல் கட்டமாக வாஉசி திடலிலிருந்து பெரியகடை வீதி வழியாக காளியம்மன் கோவில் அருகே திருத்தேர் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே இருந்து தொடங்கி பெரியப்ப ள்ளிவாசல் வழியாக தேரடியை அடையும்.

    • பெரம்பலூர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது
    • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

     பெரம்பலூர்,

    பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் பொன்விழா ஆண்டை யொட்டி மாவட்ட அளவிலான அறிவுத் திறன் போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் வேல் இளங்கோ தலைமை வகித்தார், பொரு ளாளர் புலவர் செம்பியன், இணை செயலாளர் பாவலர் சிற்றரசு ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயலாளர் முகுந்தன் வரவேற்றார். மாவட்டத்தின் அனைத்து பகுதியிலான 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையி லான மாணவ, மாணவிகள் அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்க ளாக பதியம் சாரங்கபாணி, அகழ் வினோதினி , கவிஞர் தேனரசன், கவியோவியன் ஆகியோர் வெற்றியா ளர்களை தேர்வு செய்தனர். பின்னர் வெற்றிப்பெ ற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட ப்பட்டது. முடிவில் துணை செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் மின் நுகர்வோருக்கு பெயர் மாற்றும் முகாம்
    • ஆணைகளை எம்.எல்.ஏ பிரபாகரன் வழங்கினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின் வாரிய சிறப்பு பெயர் மாற்றம் முகாமில் 60 பேருக்கு பெயர் மாற்றம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார்.தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமை யாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக மின்வாரியம் மூலம் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.இதன்படி பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர் பயனா ளிகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகண்டு பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்தி ற்கான ஆணையினை வழங்கினார்.இதில் மின்வாரிய மேற்பா ர்வை பொறியாளர் அம்பிகா கூறியதாவது-அரியலூர் மற்றும் பெர ம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ள நிலையில், தற்பொழுது தமிழக அரசின் சார்பிலும் தமிழக மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமை ப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகம் ஏற்பாடு செய்ய ப்பட்டு ள்ளது நடைபெற்று வருகிறது.இந்த முகம் மூலம் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயி க்கப்பட்டு ள்ளது. எனவே பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோ ர்கள் தேவையான ஆவணங்களை முகா ம்களில் அலுவல ர்களிடம் கொடுத்து உடனடி யாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பி னை பயன்படுத்தி கொ ள்ளலாம் என தெரிவி த்தார்.நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர்கள் சேகர், அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ் செல்வன், செல்வராஜ், காயத்திரி, பாண்டியன், வெங்கடேசன், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், இனிதா, அரவிந்த், அகமது மற்றும் மின்வாரிய ஊழியர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 25 மின் அலுவலக மையங்களில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமையாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மின் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் தொடங்கியது. பெரம்பலூர்-அரியலூர் கோட்டங்களில் உள்ள 25 மின் அலுவலக மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்ததற்கான ஆணையை பிரபாகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதைத்தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் அம்பிகா கூறுகையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது தமிழக அரசின் சார்பிலும் மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர்கள் தேவையான ஆவணங்களை முகாம்களில் அலுவலர்களிடம் கொடுத்து உடனடியாக பெயர் மாற்றம் செய்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது கோட்ட செயற்பொறியாளர்கள் (பொது) சேகர், (பெரம்பலூர்) அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் (டவுன்) முத்தமிழ் செல்வன் (டவுன்), (கிராமியம்) செல்வராஜ் மற்றும் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அரசு வேலை நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    • பெரம்பலூரில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
    • மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்கும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாடு குறித்த 3 நாள் பயிற்சி முகாம், பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஸ்ரீரங்கன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய அடைவுத்திறனில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக உள்ளதால், மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கருத்தாளர்களாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் வினா அமைப்பு குறித்து மாற்றம் ஏற்படுத்தும் முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் செய்துள்ளனர்.

    • வேன் உரிமையாளருக்கு ரூ.1¾ லட்சம் நிவாரணம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
    • காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

    பெரம்பலூர் ,

    லெப்பைக்குடிகாடு ஜமாலிநகர், மேற்கு தனிசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(வயது 46). மெக்கானிக்கான இவர் திருச்சி வரகனேரியில் சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் உள்ள இலகுரக வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 30.3.2017 அன்று ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 224 செலுத்தி ஒரு வேனை வாங்கினார். இதற்காக திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்சு நிறுவனத்தில் ரூ.11 ஆயிரத்து 376-க்கு சந்தா செலுத்தி காப்பீடு பெற்றிருந்தார்.அந்த வேன் கடந்த 16.5.2017 அன்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷாஜகான் 6.11.2017 அன்று தனது வாகனம் பழுது பார்க்கும் பட்டறை அருகே, அந்த வேனை நிறுத்தினார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்த வேனை காணவில்லை. யாரோ அந்த வேனை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷாஜகான், மங்களமேடு போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் 10.11.2017 அன்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் திருட்டு போன வேனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி மங்களமேடு போலீசார், அந்த வேனை காப்பீடு செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தை அணுகி வேன் காணாமல் போனதற்கான வழக்குப்பதிவு அறிக்கை, போலீசார் அளித்த தடையின்மை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, காப்பீட்டு தொகையை வழங்கிட கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் அலைக்கழித்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் மீது வக்கீல் இல.மானேக்சா மூலம், காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினர். இதில் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், நியூ இந்தியா அஷ்யூரன்சு காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகையை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.

    • பெரம்பலூரில் மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தையும், அதே நாளில் பழங்குடியினர் இன பெண்கள் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், அவற்றை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×