search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்ட விழா
    X

    வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்ட விழா

    வீரமாகாளியம்மன் கோவில் 2-நாள் தேரோட்டவிழா நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய ஆடித்திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மூக்குடி கிராம மக்களால் கண்டெடு க்கப்பட்டு, அறந்தாங்கியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலைக்கு சொந்தமான ஆலயத்தில் 29 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 18ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் மண்டக ப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தே ரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தினை ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலை யத்துறையினர், கிராம மக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் தொட்டு இழுத்தனர். திருத்தேரில் அமர்ந்து அருள் பாலித்து வந்த ஸ்ரீ வீரமாகாளியம்மனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற திருத்தே ரோட்டத்தில் முதல் கட்டமாக வாஉசி திடலிலிருந்து பெரியகடை வீதி வழியாக காளியம்மன் கோவில் அருகே திருத்தேர் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே இருந்து தொடங்கி பெரியப்ப ள்ளிவாசல் வழியாக தேரடியை அடையும்.

    Next Story
    ×