என் மலர்
பெரம்பலூர்
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்கனவே விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகளில், 18 ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், தற்போது கீழப்பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சீகூர், பேரையூர், சாத்தனவாடி, நெய்குப்பை, கீரவாடி ஆகிய ஏரிகளும், லாடபுரம் பெரிய ஏரி, வி.களத்தூர் சிறிய ஏரி என 10 ஏரிகளும் நிரம்பி, மறுகாலில் உபரி நீர் வெளியேறி செல்வதால், அதன் அருகே உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பல குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மாவட்டத்தில் நெற்குணம், பென்னக்கோணம், காரியானூர் ஆகிய 3 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆயிக்குடி ஏரி ஆகிய 3 ஏரிகளில் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 6 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 11 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 22 ஏரிகளில் ஒரு சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமை பாழி அருவி, லாடபுரம் மயிலூற்று அருவி, புதுநடுவலூர் அத்தி அருவி ஆகியவற்றிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெற்குணம், பேரையூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சிகூர், கைப்பெரம்பலூர், குரும்பலூர், லாடபுரம் ஆகிய 9 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி (வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி), துறைமங்கலம் பெரியஏரி, வி.களத்தூரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குரும்பலூர் ஏரி ஆகிய 54 ஏரிகளிலும் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;-
பாடாலூர்-3, அகரம் சிகூர்-14 லெப்பைக்குடிகாடு-13, பெரம்பலூர்-8, எறையூர்-9, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-9, வி.களத்தூர்-10, வேப்பந்தட்டை-9, மொத்த மழை அளவு-92 மி.மீ.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறதோ அதையெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு கனமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம், ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களையும் பார்வையிட்டார். பாம்பன் பாலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பிரவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.







