search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    பெரம்பலூரில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்ததை படத்தில் காணலாம்.

    பெரம்பலூரில் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இதில் சேர்க்கை, திருத்தத்திற்கு ஏராளமானவர்கள் படிவங்களை அளித்தனர்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்றுநடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் பலர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் உள்ளிட்டவைக்கும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவி புரிந்தனர்.

    விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28-ந்தேதிகளிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×