என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மங்களமேடு அருகே பெண்ணை தாக்கிய தம்பதி கைது

    மங்களமேடு அருகே பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டை அடுத்துள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 43). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவள்ளி(35). இவரது வீட்டின் அருகே பாலசுப்பிரமணியனின் தம்பி ராமலிங்கம்(47), அவரது மனைவி செல்லம் (38) ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று காலை புஷ்பவள்ளி வீட்டின் அருகே உள்ள மணல்மேட்டில் ராமலிங்கத்தின் குழந்தைகள் இயற்கை உபாதை கழித்ததாக தெரிகிறது. இதனை புஷ்பவள்ளி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கமும், செல்லமும் புஷ்பவள்ளியை கம்புகளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த புஷ்பவள்ளி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மங்களமேடு போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தையும், செல்லத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×