என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவியளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு 199-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றுசேர்ந்து காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் ரூ.7,27,500 குடும்பத்திற்கு வழங்கினர்.
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு வைத்தியார்காடு பகுதியை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜா (வயது 51). இவர் கடந்த மாதம் 10ந் தேதி இறந்துவிட்டர்
இவரது குடும்பத்திற்கு 93-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சிறப்பு உதவி காவலர்கள் சுமார் 4000 ஆயிரம் பேர் சேர்ந்து ரூ.7, 27,500 ரூபாயை அவரது மனைவி ஜெயலட்சுமியிடம் வழங்கினர்.
மேலும் நாகை மாவட்ட சிறப்பு உதவி காவலர்கள் சார்பாக ரூ.80 ஆயிரமும் வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட காக்கும் கரங்கங்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்
இதேபோல் மதுரை, பெரம்பலூர் விருதுநகர், கோயம்புத்தூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இறந்த சிறப்பு உதவிகாவலர்களின் குடும்பத்திற்கு காக்கும் கரங்கள் சர்பாக 36 லட்சத்து 41 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது என காக்கும் கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
வேகம் அதிகரிப்பதற்கான பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின்சார ரெயில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வர்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2010 டிசம்பர் 20-ம் தேதி வேளாங்கண்ணிக்கும் நாகப்பட்டினத்திற்கும் அப்போதைய தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து நாகையிலிருந்து
சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலான பகுதிகளில், மண்ணில் உரிய உறுதித்
தன்மை இல்லை என்பதால் இத்தடத்தில் இயங்கும் ரயில்களுக்கு
அதிகபட்சம் வேகம் 30 கி.மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
30 கி.மீட்டர் வேகம் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், மண்ணின் உறுதித் தன்மையற்ற காரணத்தால், இத்தடத்தில் 15 முதல் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால், நாகையிலிருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேளாங்கண்ணியைச் சென்றடைய ஒவ்வொரு ரயிலுக்கும் சுமார் 30 முதல் 40 நிமிடம் தேவைப்பட்டது.
இதனால், இத்தடத்திலான ரயில் சேவை துரித போக்குவரத்துக்குரியதாக இல்லை.
இது குறித்த கோரிக்கைகள்படி, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது.
ஏறத்தாழ சுமார் 5 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றுள்ள இப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக இத்தடத்திலான இருப்புப் பாதையில் கருங்கல் பேக்கிங் பணிகள் நிறைவடைந்தன.
இந்த நிலையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் நேற்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பு பாதைகளில் புழுதி பறந்தது.
தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் தீபக் நாராயண காட்டோ தலைமையில் தென்னக ரயில்வே அதிகாரிகள். பங்கேற்றனர்.
இந்த வேகச் சோதனைக்கு பிறகு, நாகை - வேளாங்கண்ணி தடத்தில் ரயில்கள் சுமார் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், பொது முடக்கம் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் முடங்கியிருக்கும் வேளாங்கண்ணி ரயில் சேவையும், இந்த சோதனைக்கு பின்னர் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து
445 மையங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தை சார்ந்த 60 ஆயிரத்து
853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது
அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார
நிலையமும், வேளாங்கண்ணி பேரூராட்சி இணைந்து வேளாங்கண்ணியில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள்,
மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் போலியோ
சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.
இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வேளாங்கண்ணி பேராலயம், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது
முகாமில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஆத்மா உறுப்பினர் மரிய சார்லி, மருத்துவர் விக்னேஸ்வர், சுகாதார ஆய்வாளர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் 3-ம் ஆண்டு பயின்று வரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ள வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார். தான் தங்கி இருக்கும் பகுதியில் சிக்கியுள்ள 8 ஆயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை அருகே செல்லி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத சுவர்ணபுரீஸ்வரர் மற்றும் செல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மகா சண்டி ஹோமம் உற்சவத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன. தொடர்ந்து லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனையும், முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நாகூர் தர்காவில் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்கா, பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததை அடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017&ம் ஆண்டுமுதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஊழல் புகார்களுக்கு உள்ளான நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகிகள் அலாவுதீன் மற்றும் அக்பர் ஆகியோரை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து, தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஆனால், இடைக்கால நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் நாகூர் தர்கா அலுவலகம் வந்த தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தர்கா வளாகம், தர்கா கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் மார்க்கெட் போன்றவைகளை நேரடி ஆய்வு மேற்கொண்ட அவர்கள் இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளை
பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதித்ததுடன், தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வர வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு உள்ளாகி நீக்கம் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகிகள் அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து, வக்பு தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே தலைமை ஆசிரியர் பிரிவுபசார விழாவில் திடீரென அவ்வழியாக வந்த அமைச்சர் பங்கேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அரசன் கட்டளை அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் மரகதவள்ளி.
இவர் பணி மாறுதல் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். நேற்று பள்ளி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் தனபாலன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி தனபாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகாலிங்கம், மாலதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த பவுன் சுப்பிரமணியன் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது வேதாரண்யம் வழியாக நாகை சென்ற அமைச்சர் விழா நடப்பதை அறிந்து காரை நிறுத்தி இறங்கி சென்று விழாவில் கலந்துகொண்டு ஆசிரியருக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசினார்.
விழாவில் திடீரென அமைச்சர் வந்து கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர சுவாமி&மனோன்மணி அம்மாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 29.1.22 அன்று மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்திருவிழா, தெப்பதிருவிழா, திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதில் ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், யாழ்பாணம் வரணீ ஆதினம் பண்டார சந்நிதி, நகராட்சி பொறியாளர் மனோகரன், காலபைரவர் வழிபாட்டு குழு தலைவர் தம்புசாமி உட்பட ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், ஓதுவாமூர்த்தி பரஞ்சோதி முனிவரின் தேவார இன்னிசையும் நடந்தது.
செம்போடை கடைத்தெருவில் உள்ள கடைகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வேண்டும் என அரசுக்கு வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா செம்போடை கடைத்தெருவில் நான்கு தலைமுறையாக உப்பனாற்று ஓரமாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள்
கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த கடைகளை நீர் நிலை புறம்போக்கில் உள்ளதாக பொது பணி துறையினர் 21 நாட்களுக்குள் காலி செய்துகொள்ள நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.
பல தலைமுறையாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடை வைத்து மளிகை பால், ஹேட்டல், காய்கறி, முடிதிருத்தும் கடை சலவை கடை என பல தரபட்ட கடைகள் இந்த கடைவீதியில் அமைந்துள்ளது.
இந்த கடை வியாபாரத்தை நம்பி ஆயிரக்கனக்கான குடும்பங்கள் உள்ளது மேலும் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இந்த கடைவீதியை நம்பி நாள்தோறும் பல்வேறு விதமாக காய்கறிகள், கீரைகள், மீன் போன்ற பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
பல கடைகாரர்கள் வங்கி மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக சுனாமி, காஜாபுயல், டெங்கு காய்ச்சல், கொரோனா என பலவகையிலும் வர்த்தகர்கள் பாதிக்கபட்டு மீளமுடியதா நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் திடிரென்று 21 நாளில் கடைகளை அகற்ற சொல்வது வர்த்தகர்களை நிலைகுலைய செய்துள்ளது.
எனவே கடைகளை அகற்று போதிய கால அவகாசம் வேண்டும் என செம்போடை வர்த்தக சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு முடிவின்படி, இதர 37 மாவட்டங்களிலும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக, நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்காத, மாவட்ட மகளிர் திட்ட அலுவலரைக் கண்டித்து, நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரை ஆற்றினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க தலைவர் குருசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சித்ரா, நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சார செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், அரசு ஊழியர் சங்க வேதாரண்யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நிறைவுரை யாற்றினார்.மாவட்டப் பொருளாளர் அந்துவஞ்சேரல் நன்றியுரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.இராஜூ, எம்.மேகநாதன், வீ.உதயகுமார், மாவட்ட தணிக்கையாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டு, என்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வேதாரண்யம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பழமையான முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சிவன், நந்தி, விநாயகர், மரக்கிளைகள் மற்றும் செட்டிப்புலத்தில் எடுக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்புள்ள முதுமக்கள் தாழி ஆகியவை வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோட்டாட்சியர் துரைமுருகன் இந்த அரிய பொருள்களை நாகை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி தாசில்தார் வேதையன் மற்றும் அலுவலர்கள் இந்த முதுமக்கள் தாழி மற்றும் சிலைகளை வேனில் நாகை அருங்காட்சியகத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை முருகன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பில்லாளியிலிருந்து மத்தளங்குடி வரை செல்லும் சாலை சேதமடைந்து கிடைப்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து பில்லாளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அரசு அறிவித்தபடி 40 கிலோ 650 கிராம் எடை சரியாக அளவீடு செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திருமருகல் ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






