என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
    X
    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

    உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு உதவி திட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு முடிவின்படி, இதர 37 மாவட்டங்களிலும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக, நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்காத, மாவட்ட மகளிர் திட்ட அலுவலரைக் கண்டித்து, நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரை ஆற்றினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க தலைவர் குருசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சித்ரா, நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சார செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், அரசு ஊழியர் சங்க வேதாரண்யம் வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நிறைவுரை யாற்றினார்.மாவட்டப் பொருளாளர் அந்துவஞ்சேரல் நன்றியுரையாற்றினார். 
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.இராஜூ, எம்.மேகநாதன், வீ.உதயகுமார், மாவட்ட தணிக்கையாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டு, என்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    Next Story
    ×